Connect with us

latest news

உருட்டு பலமா இருக்கே மனோஜு.. இன்னும் கொஞ்ச நேரத்துல அடி விழும்.. சிறகடிக்க ஆசையில் செம ட்விஸ்ட்டு!

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் வீட்டுக்கு வரும் மனோஜ் இன்னைக்கு ஷோரூமுக்கு விஜய் வந்தாரு. நான் பேசுறத கேட்டு ரெண்டு கார் வாங்கிட்டாரு. அடுத்த மாசத்துலேந்து எனக்கு ரெண்டு சம்பளம்னு சொல்லிட்டாரு என புழுகி தள்ளுகிறார். விஜயா அவரை அடக்க முயல்கிறார்.

இருந்தும் கேட்காத மனோஜ் அடுத்த வாரம் ரஜினிகாந்த் வர இருப்பதாக பொய் சொல்லிக்கொண்டே போகிறார். ஒருகட்டத்தில் முத்து சரி நீ எங்க போனனு பார்ப்போமா எனக் கேட்க எதே என்கிறார் மனோஜ். பார்க்கை காட்டியதும் இது டிநகர் பார்க்கு என உளருகிறார். அதான் நீ வேலை செய்ற இடம் என்கிறார்.

இதையும் படிங்க: விஜயகாந்த் பத்தி பேசும் போது நடுவுல ஏன் விஜய் வராரு!.. சட்டென டென்ஷனான எஸ்.ஏ. சந்திரசேகர்!..

உடனே மனோஜுன் சேட்டைகள் எல்லாம் ஃபாஸ்ட் பார்வட்டில் ஓடுகிறது. இதில் அதிர்ந்து எழுந்து நிற்கிறார் மனோஜ். முத்து இந்த விஷயம் அம்மாக்கு தெரியும் போல என போட்டு கொடுக்க அண்ணாமலை விஜயாவை பார்க்கிறார். எனக்கும் தெரியும். சொல்லி இருந்தா இதோ இப்ப செஞ்சத அப்போவே செஞ்சிருப்பான் என்கிறார். இதைக்கேட்ட ரோகினி அழுகிறார்.

வெட்டி முண்டம், தண்டச்சோறு நீ பூக்கடை வச்சிருக்கத தப்பா பேசுறீயா எனத் திட்டுகிறார் முத்து. ரவி, அப்போ நாங்க ஷோரூம் வந்தப்பையே உனக்கு வேலை இல்லையா என்கிறார். அதுனால தான் எங்கள இன்னொரு நாள் வரச்சொன்னீங்களா? நல்ல வேலை உங்களை நம்பி வந்து இருந்தா நாங்கள அசிங்கப்பட்டு இருப்போம் என்கிறார் ஸ்ருதி. 

மீனா, சொல்றேனு தப்பா நினைக்காதீங்க ரோகினி. அன்னைக்கு என்ன சொன்னீங்க இவர் நல்ல சட்டைய போட்டுட்டு கார் விக்கப்போறாரு. கார் ஓட்டப்போகலைனு சொன்னீங்க. இப்போ அவருக்கு வேலையே இல்லல என்கிறார். முத்து பார்லர் அம்மா இவனை நம்பாதே சொன்னேன்ல. அன்னைக்கு என்ன சொன்ன என்னை பாருக்கு வேலைக்கு போக சொன்னல. அதைக்கூட செய்யலாம்.

இதையும் படிங்க: வடிவேல் ஏழரையை இழுத்த 5 பெரிய நடிகர்கள்!.. கன்னத்தில் பளார் விட்ட விஜயகாந்த்..

இப்படி தண்டச்சோறு தான் சாப்பிடக்கூடாது என்கிறார். இதை கேட்ட ரோகினி, மனோஜிடம் என்னை ஏமாத்திட்டல எனக் கோபமாக சொல்லிவிட்டு ரூமுக்கு செல்கிறார். அண்ணாமலை பொய் சொல்றத எப்போடா நிறுத்தப்போற. எங்களுக்கு பழகிட்டு ரோகினி உன்னையே நம்பி வந்து இருக்கா அவளை ஏன் ஏமாத்துற என்கிறார். விஜயா நீ போய் ரோகினியை சமாதானம் செய் எனக் கூறிவிடுகிறார்.

ரூமுக்கு சென்று மனோஜ் செண்டிமெண்ட்டாக பேசியும் ரோகினி அவரை திட்டிவிட்டு வெளியில் கிளம்பி விடுகிறார். வித்யாவிடம் சென்று இதை சொல்லி புலம்பி கொண்டு இருக்க நீ சொன்ன பொய்யை நினைச்சு பாரு. இப்போ நீ பேசுனா அப்போ அவர் பேசுவாரு என்கிறார். தெரிஞ்சா தெரியட்டும். என் வாழ்க்கையே மனோஜ் தான் நினைச்சேன். அவனே ஏமாத்திட்டான். இனிமே என்ன இருக்கு என்கிறார்.

ரவியையே மன்னிச்சிட்டாங்க. மனோஜுக்கு இன்னோரு வேலை கிடைச்சிட்டா எல்லாம் மாறிடும். இரு டீ எடுத்துட்டு வரேன். என்ன செய்றதுனு யோசிக்கலாம் என்கிறார். அடுத்து ரோகினி ஒரு முடிவுடன் வெளியில் கிளம்பி சென்று விடுவதுடன்  இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

இதையும் படிங்க: அந்த நடிகர் என் காலை பிடிப்பதா?!.. கலங்கிய விஜயகாந்த்!.. படப்பிடிப்பில் நடந்தது இதுதான்!..

google news
Continue Reading

More in latest news

To Top