செழியனுக்கு பொண்ணு பார்க்கும் ஈஸ்வரி… நீங்க போடுறது ப்ளேடுனு உங்களுக்கே தெரியுதா இல்லையா?

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் வீட்டில் இருக்கும் ஈஸ்வரி மற்றும் ராமமூர்த்தி செழியனுக்கு பெண் கேட்டு வருபவர்களிடம் என்ன சொல்லலாம் என்பதை குறித்து பேசிக்கொண்டு இருக்கின்றனர். அப்போது பெண் வீட்டார் வந்துவிட செழியன் அதிர்ச்சியில் நிற்கிறார்.

இருவரும் பேசிக்கொண்டு இருக்கின்றனர். ஈஸ்வரி ராதிகாவை உட்கார வைத்து தன்னுடைய மருமகள் என்கிறார். செழியனின் முடிந்து போன வாழ்க்கை குறித்தும் பேசிக்கொண்டு இருக்கின்றனர். அப்போ மாப்பிள்ளை இருக்காரா? பார்க்கலாமா எனக் கேட்கின்றனர்.

இதையும் படிங்க: பாடாய்படுத்தும் நெப்போட்டிசம்!.. தமிழ்த்திரை உலகில் அல்லோகலப்பட்ட நடிகர் நடிகைகள்…

அப்போ செழியனை கீழே வரச் சொல்கிறார். ஈஸ்வரி பெண் போட்டோவை வாங்கி பார்த்து நன்றாக இருப்பதாக கூறுகிறார். இதனால் செழியன் கடுப்பாகி மேலே போய் விடுகிறார். மாப்பிள்ளை எதுவும் சொல்லாம எழுந்து போயிட்டாரு என பெண் வீட்டார் கேட்கின்றனர்.

அவன் கொஞ்சம் குழப்பமா இருக்கான் எனக் கோபி பேசி சமாளிக்கிறார். அந்த நேரத்தில், பாக்கியா, இனியா வீட்டுக்கு வருகின்றனர். இது யார் எனக் கேட்க ராமமூர்த்தி இது என்னுடைய மருமகள் என்கிறார். அப்போ உங்களுக்கு ரெண்டு பையனா என்கின்றனர்.

இதையும் படிங்க: நான் ரஜினி கேரக்டரில் நடிக்கிறேன்.. அவரு காமெடி பண்ணட்டும்!.. கடுப்பான கவுண்டமணி!..

இல்லை ஒரே பையன் கோபி தான் என ஈஸ்வரி சொல்கிறார். அப்போ இவங்களும் மருமகளா எனக் கேட்க கோபி இது என் வொய்ஃப், அவங்க என்னோட முன்னாள் மனைவி என விளக்கம் கொடுக்கிறார். பின்னர் பாக்கியா பெண் வீட்டாரை பார்த்து கடுப்பாகிவிடுகிறார்.

நேரே மாடிக்கு சென்று செழியனிடம் நீ என்ன நினைச்சிட்டு இருக்க என சத்தம் போடுகிறார் பாக்கியா. செழியன் எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை என்கிறார். பின்னர் அவரை கீழே கூட்டிக்கொண்டு வர எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை. நான் என் ஜெனியுடன் தான் இருப்பேன் எனக் கூறுவதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

 

Related Articles

Next Story