Connect with us

Cinema News

முடிவை நெருங்கும் செழியன் பிரச்னை… அடுத்து என்ன செய்வீங்க? பாக்கியாவுக்கு பிரச்னையா?

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் ஜோசப் பாக்கியாவை வீட்டை விட்டு துரத்துகிறார். உங்களுக்கு மரியாதை அவ்வளவு தான். வெளியே போங்க என்கிறார். மரியமும் போங்க எனக் கண்ணை காட்டுகிறார். பின்னர் பூட்டி இருந்த ஜெனி ரூமை திறந்துவிடுகிறார் மரியம்.

வெளியில் வரும் ஜெனி பாக்கியாவிடம் பேச முயற்சி செய்கிறார். ஆனால் ஜோசப் தடுத்து நிறுத்திவிடுகிறார். ஜெனி, செழியன் எப்படி இன்னொரு கல்யாணம் பண்ணிக்க போறான். அவ்வளவு தானா எல்லாம் என்கிறார். இதனால் கடுப்பாகும் ஜோசப் உனக்கும் அப்பா மாப்பிள்ளை பாக்கிறேன்.

இதையும் படிங்க: இரு பக்கமும் நெருங்கும் பிரச்னை… முத்து சமாளிப்பாரா இல்ல சிக்கிக்கொள்வாரா? பார்த்துடலாம்…

உனக்கும் உடனே கல்யாணம் செஞ்சி வைக்கிறேன் என்கிறார். எனக்கு எந்த கல்யாணமும் வேண்டாம். சும்மா இருங்க டேடி எனத் திட்டிவிட்டு செல்கிறார். மரியத்திடம் போய் செழியன் எப்படி இன்னொரு கல்யாணத்துக்கு சம்மதிச்சான். எல்லாம் முடிஞ்சிட்டா அப்போ என அழுதுக்கொண்டு இருக்கிறார் ஜெனி.

இதையடுத்து  வீட்டுக்கு வரும் பாக்கியா, ஈஸ்வரியிடம் சாப்பிட்டீங்களா என்கிறார். நீ பண்ண விஷயத்துக்கு எனக்கு பசியே இல்லாம போச்சு. அவ்வளோ நிறையவா இருக்கு என்கிறார். ராமமூர்த்தி, தப்பு தான். செழியன் விஷயத்தில் உனக்கு என்ன தோணுதோ அதுமாதிரியே செய்மா என்கிறார். பின்னர் பாக்கியா, எழில் மற்றும் அமிர்தாவிடம் ஜெனி வீட்டில் நடந்ததை சொல்லிக்கொண்டு இருக்கிறார். அப்போ மரியம் கால் செய்கிறார்.

இதையும் படிங்க: ரஜினியை வைத்து 20/20 ஆடிய இயக்குனர்… கப் அடிச்சு கொடுத்த பிகிலும் இவருதானாம்!….

செழியனுக்கு இன்னொரு கல்யாணம் பேச்சு நடந்த விஷயத்தை கேட்டு ஜெனி அழுத விஷயத்தினை கூறுகிறார். இனிமே அவங்க ரெண்டு பேரும் சந்திச்சு பேசுறது தான் சரியா இருக்கும் என்கிறார். காலையில் லொகேஷன் அனுப்புவதாக கூறி போனை வைக்கிறார். அடுத்தநாள், செழியன் மற்றும் எழிலுடன் கிளம்பி செல்கிறார் பாக்கியா. ஹாலில் கோபி மற்றும் ஈஸ்வரி எங்க போறீங்க எனக் கேட்க மூவரும் மூணு இடம் சொல்லி சொதப்புடவதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது.

google news
Continue Reading

More in Cinema News

To Top