Connect with us

Cinema News

நீங்க பண்றது உங்களுக்கே நல்லா இருக்கா… பாக்கியலட்சுமியால் கடுப்பில் இருக்கும் ரசிகர்கள்…

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் செழியன் குழந்தைக்கு பெயர் வைக்கும் ஃபங்ஷனில் ஜோசப் மற்றும் ஈஸ்வரி இருவரும் தங்களுக்கு தான் உரிமை இருப்பதாக சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர். மாற்றி மாற்றி இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது பழனிச்சாமி தன்னுடைய குடும்பத்துடன் அங்கு வருகிறார்.

பழனிச்சாமியை அனைவரும் வரவேற்கின்றனர். ராமமூர்த்தி அவரை தன்னுடைய மகன் என ஜோசப்பிடம் அறிமுகம் செய்து வருகிறார். இதை பார்க்கும் கோபி கடுப்பாகிவிடுகிறார். சரி பெயரை வைக்கலாம் என ஈஸ்வரி கூறப்போக தங்கள் முறைப்படி தான் வைக்கணும் என ஜோசப் சண்டை போடுகிறார்.

இதையும் படிங்க: இனிமே ரசிகர்களை ஏமாத்த முடியாது.. அரசியலுக்கு போறேன்!.. எம்.ஜி.ஆர் சொன்னது இதுதான்!…

மீண்டும் இருவரும் சண்டை போட பழனிசாமி குழந்தையா இருந்தாலும் அதுக்கு நம்ம பேசுறது எல்லாம் புரியும். நாளைக்கு என்னுடைய பெயர் வைக்கிற பங்ஷன்ல நீங்க சண்டை போட்டீங்கன்னு கேட்டா என்ன சொல்லுவீங்க என இருவரையும் அமைதிப்படுத்தி விடுகிறார்.

ஈஸ்வரி என்ன பெயர் வைக்கிறார் என பார்த்துவிட்டு பின்னர் மற்றதை பேசிக்கொள்ளலாம் என பழனிச்சாமி கூறுகிறார். பாக்கியாவும் அத்தை பெயரை சொல்லட்டும். அதன் பின் அதை வைத்துக் கொள்ளலாமா வேண்டாமா என்பதை செழியன் மற்றும் ஜெனி முடிவெடுக்கலாம் என்கிறார்.

ஜெனி எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை பாட்டி என்ன பேர் சொல்றாங்களோ அதுவே வைக்கட்டும் என்கிறார். இதனால் ஜோசப் கடுப்பாகிவிடுகிறார். உடனே பழனிச்சாமி உங்ககிட்ட இன்னொரு விஷயம் சொல்லணும்னு நெனச்சேன் சார் பொண்ணு நல்லா வளர்த்திருக்கீங்க என அவருக்கு ஐஸ் வைத்து அவரை கூல் செய்கிறார்.

இதையும் படிங்க:  எம்.எஸ்.வி கன்னத்தில் ‘பளார்’ விட்ட தாய்… கதி கலங்கிய சின்னப்ப தேவர்… ஏன்னு தெரியுமா?

ஓடிப் போய் அவரை பிடிக்கும் கோபி பேபிக்கு ஏதாவது ஆயிடப்போகிறது என்கிறார். இதனால் எல்லோரும் அதிர்ச்சியாக பார்க்க ஈஸ்வரி பேபியா என கேட்க நான் ராதிகாவை தான் பேபி எனக் கூறினேன் என கோபி சமாளித்து விடுகிறார். எல்லோருக்கும் ஒரு மாதிரியாகிவிட ஈஸ்வரி தலையில் அடித்து கொள்கிறார்.

ராமமூர்த்தி கோபியை திட்டுகிறார். ஜெனியின் பெற்றோர்கள் அவரிடம் சொல்லிவிட்டு வீட்டிற்கு கிளம்பி விடுகின்றனர். பழனிச்சாமி குடும்பத்தினரும் கிளம்ப அவரை நீங்க எல்லார் மனசையும் சந்தோஷமா ஆக்கிடுறீங்க சார் எனச் சொல்லி வழி அனுப்புகிறார் பாக்கியா.

இதையும் படிங்க: விஜயகாந்த் படம் பார்த்தாலே நான் அழுதிடுவேன்!.. பல நினைவுகள்!. ஃபீலிங்ஸ் காட்டும் நடிகர்!..

அருகில் இருக்கும் செல்வி  பழனிச்சாமி அண்ணன் உங்க மனசு சந்தோஷமாக்கிட்டாரா அக்கா எனக் கேட்க நான் ஜெனி அப்பாவை சொன்னேன் என்கிறார். பின்னர் கோபி ஈஸ்வரி தனியாக இருப்பதை பார்த்து அவரை காரில் வெளியில் அழைத்து செல்கிறார். உனக்கு ராதிகாக்கும் ஏதாவது பிரச்சனையா கோபி என கேட்கிறார் ஈஸ்வரி. இதனுடன் இன்றைய எபிசோடு முடிந்தது.

google news
Continue Reading

More in Cinema News

To Top