Connect with us

Cinema News

மாலினி செய்த ஒரே நல்ல விஷயம் இதுதான்.. பாக்கியாவிடம் வசமாக சிக்கிய செழியன்..! அடுத்தடுத்த திருப்பங்கள்..!

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் பாக்யா வீட்டுக்கு வர செழியன் இன்னும் வீட்டுக்கு வரவில்லை என்ற விஷயம் தெரிந்து அதிர்ச்சி அடைகிறார். உடனே அவருக்கு கால் செய்கிறார். கோபி அவன் வேலையா இருப்பான் எதுக்கு இப்படி பண்ற என கோபப்படுகிறார்.

ஈஸ்வரியும் பாக்கியாவை அமைதிப்படுத்த தொடர்ந்து கால் செய்து கொண்டே இருக்கிறார். மறுபடியும் ஒரு பிரச்னை வேண்டாம் என்பதற்காக ஈஸ்வரி கோபியை அங்கிருந்து அழைத்து சென்று விடுகிறார். பாக்யா எழிலை அழைத்து கொண்டு செழியனின் அலுவலகத்துக்கு வருகிறார்.

இதையும் படிங்க: அண்ணா உட்ருண்ணா!.. லியோ ஃபிளாஷ்பேக்கே பொய்யாம்.. உருட்ட ஆரம்பித்த லோகேஷ் கனகராஜ்!..

செழியன் வந்தானா என விசாரிக்க ஜெனிக்கு பிரசவம் முடிந்ததில் இருந்து அவர் விடுமுறையில் இருப்பதாக கூறுகின்றனர். சரியென மாலினி குறித்து விசாரிக்கிறார். ஆனால் அவர் ப்ராஜெக்ட் முடிந்து ரொம்ப நாளாச்சு. இப்போ மாலினிக்கும் இந்த ஆபீஸ்க்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்ல பாக்கியா அதிர்ச்சி அடைகிறார். எழிலிடம் இதை சொல்லி புலம்புகிறார். இதையடுத்து மறுநாள் பாக்கியா கோவிலில் இருக்கிறார்.

அங்கு வரும் மாலினி இதை பார்த்து விட்டு செழியனுக்கு கால் செய்து நீ இப்போ வரலைனா உங்க அம்மாக்கிட்ட சொல்லிடுவேன் என மிரட்டுகிறார். இதையடுத்து மாலினியை இழுத்து கொண்டு போய் தனியாக பேசிவிட்டு அனுப்பி விடுகிறார்.

ஆனால் அதற்குள் இதை பார்த்த செல்வி பாக்கியாவிடம் சொல்லி விடுகிறார். சரியாக மாலினி சென்ற பின்னர் செழியன் பின் வந்து நிற்கிறார். இதை பார்த்து செழியன் அதிர்ச்சி ஆகிவிடுகிறார். இங்கு என்னதான் நடக்குது என்ன பிரச்சனை உனக்கு என்று கேட்கிறார்.

ஒரு கட்டத்தில் செழியன் உடைந்து அழுது விடுகிறார். மாலினி என்னை மிரட்டுறா என உண்மையை போட்டு உடைக்கிறார். அது எப்படி நீ எதுவுமே செய்யாம அவ உன்னை மிரட்ட முடியும் என பாக்கியா கேட்கிறார். நான் அவ மேல பரிதாபப்பட்டு தான் அவகிட்ட பேசினேன். 

அதை அட்வாண்டேஜா எடுத்துக்கிட்டு அவ கூடையே இருக்கணும். இல்லனா உங்ககிட்ட, ஜெனிக்கிட்ட சொல்லுவேனு மிரட்டுறா. சைக்கோ மாதிரி நடந்துக்குறா என்கிறார். நீ எதுவும் தப்பு செஞ்சியா என பாக்கியா கேட்க கடவுள் மீது ஆணையா நான் எதுவுமே பண்ணலை என்கிறார்.

இதையும் படிங்க: இது தான் கெட்ட நேரமோ..! 4 லட்சத்தினை உடனே கட்ட முடியாமல் திணறும் அண்ணாமலை குடும்பம்..!

google news
Continue Reading

More in Cinema News

To Top