Connect with us

latest news

பாக்கியலட்சுமி: அம்ருதாவை நெருங்கிய கணேஷ்…! மருத்துவமனை வந்த ராதிகா… அதிர்ச்சியில் மாலினி..!

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் குடும்பத்தார் எல்லோரும் ஜெனியின் குழந்தையை கொஞ்சிக் கொண்டு இருக்க இனியாவும், ராமமூர்த்தியும் குழந்தையை காண வருகின்றனர். இனியா குழந்தையை கொஞ்சிக்கொண்டு இருக்கிறார்.

மறுபக்கம் கணேஷ் அமிர்தாவின் ஐடி கார்டில் இருக்கும் அவர் கல்லூரிக்கு செல்கிறார். அங்கு அட்மிஷன் அலுவலகத்தில் அமிர்தாவின் ஐடியை காட்டி இவரின் விவரம் வேணும் எனக் கேட்கிறார். அதை ஏன் நீங்க கேட்குறீங்க என அபீஷர் கேட்கிறார். அந்த நேரத்தில் அம்ருதா பெயரை கூட அருகில் இருக்கும் அவர் க்ளாஸ் தோழி நீங்க ஏன் அம்ருதாவை தேடுறீங்க என்கிறார்.

இதையும் படிங்க:ஓவர் சீன் போடாதீங்க!.. நாங்க இல்லாம நீங்க இல்ல!.. விஜய் மீது காண்டான பயில்வான் ரங்கநாதன்…

நான் அம்ருதாவின் கணவர் எனக் கூறுகிறார். பின்னர் தனக்கு நேர்ந்ததை ஷார்ட்டாக சொல்லி அம்ருதா சென்னையில் இருந்த வீட்டின் அடையாளத்தினை கூறுகிறார். பின்னர் அம்ருதாவின் தொலைப்பேசி எண் கிடைக்குமா எனக் கணேஷ் கேட்கிறார்.

ஆனால் அவர் தோழி இன்னொரு பெண்ணுக்கு கால் செய்து பார்க்க லைன் கிடைக்காமல் போய்விடுகிறது. தன்னோட நம்பரை கொடுத்து விட்டு அம்ருதாவின் நம்பர் கிடைத்தால் கூப்பிட சொல்லிவிட்டு செல்கிறார். இங்கு மருத்துவமனையில் கோபி ஜெனியின் குழந்தையை கொஞ்சி கொண்டு இருக்க அருகில் பாக்கியா நிற்கிறார்.

அந்த நேரத்தில் ராதிகா உள்ளே நுழையும் போது இதை பார்த்து கடுப்பாகிறார். பின்னர் குழந்தையை பார்த்துவிட்டு கோபியை நைசாக பேசி அழைத்து சென்று விடுகிறார். பின்னர் காரில் செல்லும் போது நீங்க பாக்கியாவோட குழந்தையை கொஞ்சிக்கிட்டு இருந்தீங்கள என நக்கலடிக்கிறார்.

இதையும் படிங்க:இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போவது இவர் தான்!.. கட்டம் கட்டிட்டாங்க!..

குழந்தை நம்ம வீட்டுக்கு பக்கத்துல தான் இருக்கும். அடிக்கடி போய் பாக்குற வேலை வச்சிக்காதீங்க என கோபமாக கூறுகிறார். கோபி தெரியாத்தனமா அப்படி பண்ணிட்டேன் ராதிகா என மன்னிப்பு கேட்கிறார். பின்னர் குழந்தையை காண எழில் ஹாஸ்பிட்டலுக்கு வருகிறார். குழந்தையை கொஞ்சிக்கொண்டு அங்கிருப்பவர்களிடம் கலகலப்பாய் பேசிவிட்டு செல்கிறார்.

பின்னர் பாக்கியா ஜெனியின் அம்மாவை நீங்க வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க நாங்க இருக்கோம் எனக்கூறி அனுப்பி வைக்கிறார். இந்தநேரத்தில் செழியனுக்கு மாலினி கால் செய்கிறார். அப்போது தனக்கு குழந்தை பிறந்து இருக்கும் விஷயத்தினை கூற மாலினி அதிர்ச்சி அடைவதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

google news
Continue Reading

More in latest news

To Top