Connect with us

latest news

பாக்கியலட்சுமி: அட ஒன்னு விட்டா இன்னொன்னு…! கணேஷுக்கு ப்ரேக்கு..! அடுத்து மாலினி தானே!

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கோபி தலைவலி என ஏமாற்றி தூங்கி விடுகிறார். பின்னர் எழுந்து பார்க்க மயூவையும் ராதிகாவையும் ஷாப்பிங் போயிட்டு வாங்க எனக் கூறுகிறார். இல்லை நீங்க வந்தா ஒன்னா போயிட்டு வந்துடலாம் எனச் சொல்கிறார்.

இன்னைக்கு தப்பிச்சாச்சு என நினைத்து கொள்கிறார் கோபி. அடுத்த நாள் ஆபிஸில் இருக்கும் அவருக்கு கால் செய்து அவசரமாக வர சொல்கிறார் ராதிகா. வீட்டுக்கு வந்தவர் ஏன் என்னை அவசரமாக வரச்சொன்ன எனக் கேட்கிறார். நம்ம டிநகர் கோல்ட் பேளஸ் போறோம் எனக் கூறுகிறார். பேளஸ் எதுக்கு போறோம் எனக் கேள்வி எழுப்புகிறார் கோபி. அட தங்க மாளிகை என ராதிகா சொல்ல அதிர்ந்து விடுகிறார்.

இதையும் வாசிங்க: கவுதம் மேனனுக்கு சம்பளம் இத்தனை கோடியா?!.. பேசாம டைரக்‌ஷனை விட்டு நடிகராவே மாறிடலாம்!..

அத்தைக்கு தானே எடுக்க போறோம். அவங்க வந்தோன போவோமா என்கிறார். இல்லை சர்ப்ரைஸா தானே போறோம். எங்க மேல பாசம் இருந்தா வாங்க என ராதிகா லாக் செய்து விடுகிறார். இதனால் கோபி அதிர்ச்சியாகி விடுகிறார். பர்ஸ், கார்டுலாம் இருக்கா எனக் கேட்க மைண்ட் வாய்ஸில் தன் நிலைமை மோசமாக இருப்பதை கூறிக்கொள்கிறார்.

பின்னர் மூவரும் ஷாப்பிங் செல்கின்றனர். அதை தொடர்ந்து வீட்டில் அமர்ந்து எழில், பாக்கியா, ஜெனி மூவரும் பேசிக்கொண்டு இருக்கின்றனர். அப்போது எழில் பாப்பாக்கு இன்னும் பேரே சொல்லலை என வம்பு இழுக்கிறார். அதையடுத்து வீட்டுக்கு வருகிறார் செழியன். அப்போ ஜெனிக்கு புடவை வாங்கி வந்து கொடுக்கிறார். எழில் உன்னை பெத்த அம்மாவுக்கு ஒரு புடவை வாங்கி தர தோணுச்சா எனக் கலாய்க்கிறார்.

இதையடுத்து என்னைய சொன்னா இந்த பாரு அம்மாக்கு புடவை என எடுத்து கொடுக்கிறார். ரொம்ப காஸ்ட்லி புடவையை பார்த்ததும் பாக்கியா ஆச்சரியப்படுகிறார். இதையடுத்து வெளியில் எட்டி பார்க்கும் பாக்கியாவை எழிலும், செழியனும் என்னவென கேட்கின்றனர். இல்ல மழை வருதானு பார்த்தேன் எனக் கலாய்க்கிறார். இதையடுத்து செழியனுக்கு மாலினி கால் பண்ணிக்கேட்டே இருக்க அந்த இடத்தில் இருந்து சமாளித்து விட்டு செல்கிறார். 

இதையும் வாசிங்க:லியோ படத்தை வெளியிட தடை!.. சோதனை மேல் சோதனை!.. கொஞ்சம் கேப் விடுங்கப்பா!…

எழிலிடம் செழியன் சரியில்லை எனக் கூறுகிறார். அவரும் நானும் கவனித்தேன் மாலினியை பார்த்தாலே பயப்படுவதாக நகைச்சுவையாக சொல்லி காட்டுகிறார். பின்னர் அமிர்தாவின் மாமியார், மாமனார் கால் செய்தாங்களா எனக் கேட்கின்றார். இல்லை பார்த்துட்டு வரேன் எனக் கூறுகிறார். 

அதெல்லாம் வேண்டாம். அவங்களுக்கு எதுவும் தேவைனா அவங்களே கால் செய்வாங்க. நீ எங்கையும் போக கூடாது எனக் கூறிவிட்டு செல்ல பாக்கியா செல்வதையே எழில் பார்த்துகொண்டு நிற்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

google news
Continue Reading

More in latest news

To Top