Connect with us

Cinema News

பாக்கியலட்சுமி: கேண்டீனை விட்டு வெளியேறிய பாக்கியா… குஷியில் ராதிகா- கோபி… கடுப்பில் ஈஸ்வரி..!

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் கணேஷ் தனது பெற்றோர்களிடம் அம்ருதாவை தேடி கண்டுப்பிடிக்க சென்னை செல்வதாக சொல்கிறார். இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர். கணேஷனை தடுக்க முயன்றும் முடியாமல் போகிறது. அவர்களிடம் சொல்லிவிட்டு கணேஷ் கிளம்பி விடுகிறார். ஓட்டிங்கில் தோற்ற பாக்யா கேண்ட்டீனை காலி செய்து கொண்டு இருக்கிறார்.

வேலை செய்யும் பெண்கள் அங்கிருக்கும் பொருட்களை எடுத்து வைத்துக்கொண்டு இருக்கின்றனர். பாண்டிச்சேரி ஃபங்ஷனில் வேலை செய்ததற்கு இன்னும் சம்பளம் கொடுக்கவில்லை. அதை கேட்கலாமா என அங்கிருக்கும் பெண்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர். இதைக்கேட்ட செல்வி இந்த நேரத்தில் பேச வேண்டிய பேச்ச என அவர்களை பிடித்து திட்டுகிறார். 

இதையும் படிங்க: கோட்டை விட்ட இறைவன்!.. தட்டித் தூக்கிய வேட்டையன்!.. சந்திரமுகி 2 முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?..

பாக்கியா இதையெல்லாம் பார்த்து கண்ணீர் வடித்து மொத்தமாக காலி செய்து கிளம்புகிறார். இதை பார்த்த ராதிகா செம குஷியாகிவிடுகிறார். கேண்ட்டீன் போர்ட்டினை வைத்து அழுதுக்கொண்டே வெளியேறுகிறார். வீட்டுக்கு வந்து வருத்தத்தோடு இருக்கிறார்.

வீட்டிற்கு சில பெண்கள் வந்து அந்த காசை கேட்கிறனர். இதனால் மேலும் கவலையாகும் பாக்கியா சீக்கிரம் எதையும் செய்வேன் என ஆறுதல் சொல்லி அனுப்பி வைக்கிறார். அங்கிருந்த செல்வியும் அந்த பெண்களை திட்டுகிறார். இதில் ஈஸ்வரி பாக்கியாவின் மீதே கடுப்பாகி கத்துகிறார். உனக்கு இது தேவைத்தான். 

இதையும் படிங்க: இதுவே ஒரு வாரத்துக்கு தாங்கும்!. நெட்டிசன்களின் தூக்கத்தை கெடுக்கும் ராய் லட்சுமி….

டிவோர்ஸ் ஆன பின்னர் அமைதியாவா இருந்த என தேவையில்லாத வார்த்தைகளால் திட்டுகிறார். வீட்டுக்கு வரும் ராதிகாவிடம் கோபி ஆவலுடன் என்ன ஆச்சு எனக் கேட்கிறார். வேற என்ன கேண்டீன் மொத்தமா காலி பண்ணிட்டாங்க என்று சொல்கிறார்.

இதில் பாக்கியா தோத்துட்டா என கோபி ரொம்பவே சந்தோஷப்படுகிறார். வா நீ நான் மயூ என மூணு பேரும் வெளியே போய் சந்தோஷமா சாப்பிட்டு வரலாம் என ஜாலியாக கிளம்புகிறார். பாக்யா கேண்டினில் நடந்தது, ஈஸ்வரி சொன்னது என எல்லாத்தையும் நினைத்து வருத்தப்படுவதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது. 

google news
Continue Reading

More in Cinema News

To Top