More
Categories: Cinema News latest news

சூர்யா துண்டக் காணோம் துணியக் காணோம்னு ஓடுன வணங்கான் படம்!.. இப்போ எப்படி வந்துருக்கு தெரியுமா?..

சேது படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு சியான் விக்ரம் என்னும் சிறந்த நடிகரை கொடுத்த இயக்குனர் பாலா நடிக்கவே தெரியாது என சொல்லி வந்த சூர்யாவை நந்தா மற்றும் பிதாமகன் உள்ளிட்ட படங்கள் மூலமாக நல்ல நடிகராக மாற்றினார்.

முன்னணி நடிகர்களை வைத்து படங்களை இயக்கி வந்த பாலா அஜித்தை வைத்து நான் கடவுள் படத்தை இயக்க ஆரம்பித்த நிலையில், அந்த படத்திலிருந்து அஜித் விலகிவிட்டார். அதன் பின்னர் ஆர்யாவை வைத்து அந்தப் படத்தை எடுத்து முடித்தார் பாலா.

Advertising
Advertising

இதையும் படிங்க: ஏ.ஆர். ரஹ்மான் பையன்கிட்ட இருந்து கீபோர்டை முதல்ல புடுங்குங்க.. அயலான் பாட்டு ஹாஃப் பாயிலா இருக்கே!

அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை என தொடர்ந்து இளம் நடிகர்களை வைத்தே படங்களை இயக்கி வந்த நிலையில் ஒரு கட்டத்துக்கு மேல் பாலாவுக்கு புதுப்பட வாய்ப்புகள் கிடைக்காமலே போய்விட்டது. அதற்கு முக்கிய காரணம் சியான் விக்ரம் தனது மகனை பாலா இயக்கத்தில் அறிமுகப்படுத்த நினைத்ததுதான்.

வர்மா படத்தால் அசிங்கப்பட்ட பாலாவுக்கு வணங்கான் படத்தின் மூலம் வாய்ப்புத் தருகிறேன் என வந்த சூர்யா அந்த படத்தை தயாரித்து நடிக்க முடிவு செய்தார். ஆனால், வர்மா படமாவது முழுமையாக நிறைவடைந்தது. அதைவிட கொடுமையாக வணங்கான் படத்திலிருந்து பாதியிலேயே விலகிய சூர்யா இனிமேல் தயாரிக்கவும் மாட்டேன் என பாலாவை ஒரேடியாக கைகழுவி விட்டார்.

இதையும் படிங்க: பெரிய நடிகர்.. மூனு மடங்கு சம்பளம்!.. ஆந்திராவிலும் கொடியை நட்ட யோகிபாபு..

அதே வணங்கான் டைட்டிலை வைத்து உருவாகி வரும் படத்தில் அருண் விஜய், பிரியா பவானி சங்கர் நடித்து வருகின்றனர். ஆனால், முன்பை போல சைக்கோ இயக்குனராக பாலா இல்லை என்றும் அருண் விஜய்க்கு இது மிகப்பெரிய திருப்புமுனை படமாக அமையும் என்றும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தப் படத்தை மிஸ் செய்து விட்டோமே என சூர்யாவை வருத்தப்படும் அளவுக்கு பாலா படத்தை இயக்கி வருவதாக கூறுகின்றனர்.

Published by
Saranya M

Recent Posts