Connect with us
geetha

Cinema News

பெர்ஃபார்மன்ஸுக்குனு அப்படி பண்ணேன்! அத நக்கி சாப்பிடுனு சொல்லிட்டாரு – கொடுமையை அனுபவித்த நடிகை

பாலச்சந்தர் திரைத்துறைக்கு வருவதற்கு முன்னரே பல நாடகங்களை எழுதி அரங்கேற்றியவர். முதன்முதலாக எம்ஜிஆர் நடிப்பில் தெய்வத்தாய் என்ற திரைப்படத்தின் மூலம் வசனம் எழுதியதற்காக சினிமாவில் அறிமுகமானவர்தான் பாலச்சந்தர். இவருடைய நாடகக் குழுவில் தான் நடிகர் நாகேஷும் நடித்துக் கொண்டிருந்தார்.

எந்த இயக்குனரிடமும் உதவி இயக்குனராக பணி புரியாமல் நேரடியாகவே நீர்க்குமிழி என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக இயக்குனராக அறிமுகமானார் பாலச்சந்தர். எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி என அந்தக் காலத்தில் இருந்து இன்று வரை அனைத்து நடிகர் படங்களிலும் இவருடைய பங்கு என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

geetha1

geetha1

இதையும் படிங்க : பாத்ரூம் போன இடத்துல சில்க் இப்படி பண்ணுவாங்கனு எதிர்பார்க்கல – பட்ட கஷ்டத்தை பகிர்ந்த ஷகீலா

சிவாஜியை வைத்து இவர் இயக்கிய ஒரே திரைப்படம் எதிரொலி. அதேபோல ஜெயலலிதாவை ஒரே ஒரு படத்தின் மூலம் இயக்கும் வாய்ப்பு பாலச்சந்தருக்கு கிடைத்தது. அந்தப் படம் மேஜர் சந்திரகாந்த். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் பல படங்களை இயக்கி இருக்கிறார் பாலச்சந்தர்.

தமிழ் சினிமாவில் இரு பெரும் தூண்களாக இருக்கும் ரஜினி கமல் ஆகியோரை வைத்து நினைத்தாலே இனிக்கும் என்ற படத்தை இயக்கினார். இந்த படம் தான் ரஜினி கமல் ஆகிய இருவரும் இணைந்து நடித்த கடைசி படமாகும். இவருடைய இயக்கத்தில் அதிகமாக பயன்படுத்திய நடிகர்கள் என்றால் ஜெமினி, கமல், நாகேஷ், முத்துராமன், மேஜர் சுந்தர்ராஜன் ஆகியோர்கள். அதில் குறிப்பாக பாலச்சந்தருக்கு மிகவும் பிடித்தமான நடிகர் என்றால் நாகேஷ்.

geetha2

geetha2

இந்த நிலையில் பிரபல நடிகை கீதா பாலச்சந்தர் இயக்கத்தில் கல்கி, புது புது அர்த்தங்கள் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். அந்த சமயத்தில் பாலச்சந்தரால் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை பற்றி ஒரு பேட்டியில் கீதா கூறியிருக்கிறார். புதுப்புது அர்த்தங்கள் என்ற படம் 1989இல் வெளிவந்த படமாகும். இதில் ரகுமான் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக கீதா நடித்திருப்பார்.

படத்தின் கதைப்படி கணவன் மனைவியாக இருக்கும் ரகுமான் கீதா. இவர்களுக்குள் சில பல பிரச்சனைகள் ஏற்பட கணவனான ரகுமான் மீது எப்பொழுதுமே ஒரு வித கோபத்துடன் பேசும் மனைவியாகவே கீதா இருப்பார். குறிப்பாக பிரபலமாக இருக்கும் தன் கணவன் ரகுமான் மீது சந்தேகப்படும் ஒரு சாதாரண மனைவியாக கீதா நடித்திருப்பார்.

இதையும் படிங்க : பார்த்திபனால் நின்று போன ரஜினி படம்!.. யார் சொல்லியும் கேட்காத நக்கல் நாயகன்….

அந்தப் படத்தின் காட்சிகளில் பாலச்சந்தருக்கு மிகவும் பிடித்த காட்சியான கீதாவும் ரகுமானும் ஒரு வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது கோபத்தில் என்ன செய்வது என தெரியாமல் கீதா டைனிங் டேபிளில் இருந்த சாஸை எடுத்து திடீரென ரகுமானின் முகத்தில் ஊற்றி விடுவார். இதை பாலச்சந்தரம் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லையாம்.

geetha3

geetha3

ஆனால் இது மிகவும் நன்றாக இருக்கிறது, நீ என்ன பண்ணு? ஊற்றியதை அப்படியே நாக்கால நக்கி சாப்பிடு. அப்பொழுது தான் அவன் கோபத்தை அடக்குற மனைவியாகவும் தெரியும் என பாலசந்தர் கூறினாராம். ஏதோ பெர்ஃபார்மன்ஸுக்கு செஞ்சது நமக்கே வினையா போச்சே என நினைத்துக் கொண்டு அப்படியே நடித்தேன். பிறகு என்ன செய்வது இந்த காதில் வாங்கியதை அந்த காதில் வரும் போது உடனே நடித்திட வேண்டும். அதுதான் பாலச்சந்தருக்கு மிகவும் பிடிக்கும் என அவர் சொன்னதைப் போல நடித்தாராம். மேலும் கல்கி போன்ற படங்களில் நடிக்கும் போதும் சில காட்சிகள் பிடிக்கவில்லை என்றால் சத்தம் போடுவாராம் பாலச்சந்தர். அந்த சமயங்களில் நான் நிறையவே அழுதிருக்கிறேன் என கூறினார் கீதா.

google news
Continue Reading

More in Cinema News

To Top