சேரா இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்த பவா செல்லத்துரை! பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டாரா?

Bigg Boss Season 7: விஜய் டிவியில் ரியாலிட்டி ஷோக்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு உலகெங்கிலும் உள்ள விஜய் டிவி ரசிகர்கள் ஆதரவை அளித்து வருகின்றனர்.

ஆறு சீசன்களை கடந்து இப்போது ஏழாவத் சீசனில் பிக்பாஸ் அடியெடுத்து வைத்திருக்கிறது. மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் முதல் எலிமினேஷன் ஷோ நேற்று நடந்தது. அதில் அனன்யா முதல் வார எலிமினேஷனாக வெளியேற்றப்பட்டார்.

இதையும் படிங்க: ‘தசாவதாரம்’ படத்தில் அந்த கேரக்டர் ஹிட்டானதுக்கு கலைஞர்தான் காரணமாம்! இவ்ளோ நாள் தெரியாம போச்சே

முற்றிலும் வித்தியாசமான முறையில் இந்த சீசன் தொடங்கியிருக்கிறது. சீசன் ஆரம்பமான முதலே முழுவதும் ரணகளமாக மாறியிருக்கிறது பிக்பாஸ் வீடு. இந்த நிலையில் யாரும் எதிர்பாராத ஒரு திருப்பமாக நேற்று பவா செல்லத்துரையும் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியிருக்கிறார் என்ற தகவலும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது.

இதை பிரபல நடிகையும் நியூஸ் வாசிப்பாளருமான ஒருவர் தன்னுடைய வலைதள பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியேற்றப்பட்டாரா இல்லையா என்பதை இன்று ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியை பார்க்கும் போது தெரியும்.

இதையும் படிங்க: சிறகடிக்க ஆசை: முத்து ஆசைக்கு நோ சொன்ன மீனா அம்மா.. ஸ்ருதியை அவாய்ட் செய்யும் ரவி…

இருந்தாலும் பவா செல்லத்துரை இந்த நிகழ்ச்சிக்குள் வந்ததில் இருந்தே அவருக்கு எதிராக பல பேர் தங்களுடைய விமர்சனங்களை முன்வைத்தனர். அதாவது இந்த நிகழ்ச்சியில் பங்குபெறுவதன்மூலம் பவா தனது நன்மதிப்பை இழக்கவேண்டாம் என்றும் ,

கலந்துகொண்டிருக்கக்கூடாது என்றும் இலக்கியவாதியாக அறியப்படும் இவர், பொழுதுபோக்கு நிகழ்வில் கலந்துகொண்டது வேதனை தருகிறது என்றும் மிகவும் எளிமையான மனிதர் ஆனால் இவர் தற்போது தேர்வு செய்துள்ள தளம் இவருக்கு ஏற்றது அல்ல என்றும் கூறிவந்தனர்.

இதையும் படிங்க: மிஷ்கினை செருப்பால அடிப்பேனு சொன்ன நடிகை! அவர் செஞ்ச வேலை அப்படி – வாய வச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டாரு போல

இதெல்லாம் ஒரு புறம் இருக்க சமீபத்தில் ஜோவிகாவிற்கும் விசித்ராவிற்கும் இடையே நடந்த பனிப்போரில் ஜோவிகாவிற்கு ஆதரவாக கல்வி அவசியமில்லை என்ற கருத்தை பவா செல்லத்துரை கூறியது அனைவருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

ஒரு இலக்கியவாதியாக இருந்து இப்படி கல்வியை குறைத்து மதிப்பிடலாமா என பிக்பாஸ் ரசிகர்கள் பவா செல்லத்துரை மீது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தனர். இதற்கிடையில் பிக்பாஸ் வீட்டில் என்ன நடந்தது என தெரியவில்லை. அதிரடியாக பவா வெளியேற்றப்பட்டார் என்ற தகவல் மட்டும் வெளியாகியிருக்கிறது.

 

Related Articles

Next Story