வெற்றிமாறன் வந்தாலும் சூர்யா வரமாட்டார் போல!.. மீண்டும் சைலண்ட் மோடுக்கு போகும் வாடிவாசல்!..

தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனராக கருதப்படுபவர் வெற்றி மாறன். பொல்லாதவன் திரைப்படம் மூலம் இயக்குனராக களம் இறங்கினார். இவர் மறைந்த இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திராவின் சிஷ்யர் ஆவார். முதல் படத்திலேயே கவனம் ஈர்த்தார்.

அதன்பின் சிறந்த நாவல்களை சினிமாவாக எடுக்க துவங்கினார். அப்படித்தான் விசாரணை, அசுரன், விடுதலை போன்ற படங்கள் வெளியானது. ஒருபக்கம், ஆடுகளம், வட சென்னை என அடித்து ஆடினார். இந்த படங்கள் எல்லாமே ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்தது.

இப்போது விடுதலை 2 படத்தை இயக்கி வருகிறார் வெற்றி மாறன். காமெடி நடிகராக இருந்த சூரியை ஹீரோவாக மாற்றி அவரின் வாழ்வில் ஒளியேற்றிவிட்டார். விடுதலை 2 படமும் சூரிக்கு ஒரு முக்கிய படமாக அமையவிருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.


ஒருபக்கம், 4 வருடங்களுக்கு முன்பே வெற்றிமாறனும் சூர்யாவும் வாடிவாசல் என்கிற படத்தில் இணையவிருந்தனர். ஆனால், அந்த படம் இதுவரை டேக் ஆப் ஆகவில்லை. விடுதலை, விடுதலை 2 ஆகிய படங்களின் படப்பிடிப்பால் வெற்றிமாறனால் வாடிவாசல் படத்தை எடுக்க முடியவில்லை.

ஒருபக்கம் சூர்யாவும் ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன், கங்குவா என போய்விட்டார். இப்போது கங்குவா படம் முடிந்துவிட்டது. எனவே, வருகிற டிசம்பர் மாதம் வாடிவாசல் படப்பிடிப்பு துவங்கும் என சில நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது. கங்குவா படம் வருகிற நவம்பர் 14ம் தேதி வெளியாகவுள்ளது.

ஒருபக்கம், கார்த்திக் சுப்பாராஜின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. அதை முடித்துவிட்டு ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் சூர்யா. இந்த படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் 15ம் தேதிக்கு பின் துவங்கி தொடர்ந்து நடைபெறவிருக்கிறது. இப்படத்தை 2025ம் வருடம் மே மாதம் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். இந்த படத்தில் நடிக்க சூர்யா போய்விட்டால் வாடிவாசல் படப்பிடிப்பில் அவர் எப்படி கலந்து கொள்வார் என்பது தெரியவில்லை.

எனவே, வாடிவாசல் மீண்டும் தள்ளிப்போகுமா என்கிற கவலை சூர்யா ரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

Related Articles
Next Story
Share it