More
Categories: Cinema News latest news

அவனே அவளோ கோடி வாங்குறான்… நான் வாங்க மாட்டேனா.? அடம் பிடிக்கும் தனுஷ்.! அலறும் தயாரிப்பாளர்கள்….

தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகர்களில் முக்கியமானவராக இருக்கிறார் தனுஷ். தமிழை போல, பாலிவுட், ஹாலிவுட் என தனது நடிப்பு திறனை காட்டி தற்போது தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார் தனுஷ். வாத்தி என அந்த படம் தமிழிலும் ரெடியாகி வருகிறது.

Advertising
Advertising

இவர் ஆரம்ப காலத்தில் தனது வுண்டர் பார் பட நிறுவனம் மூலம் தனது படங்களை மட்டுமின்றி சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, அட்டகத்தி தினேஷ் போன்றவரின் படங்களையும் தயாரித்து வந்தார்.

குறிப்பாக சிவகார்த்திகேயனை தனது 3 படத்தில் காமெடி நடிகராக மாற்றி, பின்னர் அடுத்த படத்திலேயே முன்னணி கதாநாயகனாக எதிர்நீச்சல் எனும் திரைப்படம் மூலம் சிவகார்த்திகேயனை வெற்றி பட ஹீரோவாக மாற்றினார் தனுஷ். மீண்டும் SKவின் காக்கி சட்டை படத்தை தயாரித்தார் தனுஷ்.

இதுகுறித்து அண்மையில் சினிமா பத்திரிக்கையாளர் பிஸ்மி ஒரு நேர்காணலில் குறிப்பிடும்போது, ‘ தற்போதெல்லாம் நடிகர்கள் தங்கள் மார்க்கெட்டை வைத்து சம்பளம் உயர்த்தி கொள்வது இல்லை, அந்த நடிகர் இவ்வளவு வாங்குகிறார், இந்த நடிகர் இவ்வளவு வாங்குகிறார், அதனால் எனக்கும் இத்தனை கோடி கொடுங்கள் என்று தயாரிப்பாளர்களை கேட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்களேன் – இதுவரை செஞ்சதே போதும்… ஆந்திர பக்கம் அரசியலில் விஷால்… பின்னணி சம்பவம் இதோ..

ஏன் தனுஷ் சம்பளத்திற்கு கூட ஒரு வகை காரணம் சிவகார்த்திகேயன் தான். சிவா தனது ஒவ்வொரு படத்திற்கும் ஐந்து கோடி வீதம் சம்பளத்தை ஏற்றி வருகிறார். அதனை பார்த்து தான்,தனுஷ், நான் வளர்த்து விட்ட பையன். அவனே அவ்வளவு கோடி சம்பளம் வாங்குறான். அப்படி இருக்கும்போது நான் மட்டும் ஏன் வாங்க கூடாது? என்று தனுஷும் 25 முதல் 30 கோடி வரை சம்பளத்தை உயர்த்தி விட்டார். இதனால், பாதிக்கப்பட போவது தமிழ் சினிமா தயாரிப்பாளர்களும் தமிழ் சினிமாவும் தான்.’ என்று தனது ஆதங்கத்தை அந்த நேர்காணலில் கொட்டி தீர்த்தார் சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி.

Published by
Manikandan

Recent Posts