Connect with us
director bala

Cinema News

பாலாவுக்கே இப்படினா அதுல நடிக்கிறவங்க நிலைமை?!… தயாரிப்பாளர் தலைல துண்டு விழாம இருந்தா சரிதான்…

தமிழ் திரைபட இயக்குனர்கள் தாங்கள் இயக்குகின்ற படங்கள் அனைத்து நன்றாய் வரவேண்டும் என்பதற்காக நடிகர்களை சற்று அதிகமாய் வேலை வாங்குவது இயல்பே. ஆனால் சில இயக்குனர்கள் மிகவும் கொடூரமாகவே நடத்து கொள்வர். அந்த வரிசையில் உள்ளவர்தான் இயக்குனர் பாலா.

தமிழில் சேது திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாலா. இப்படத்தில் நடிகர் சீயான் விக்ரம் கதாநாயகனாக நடித்திருந்தார். இப்படத்தில் விக்ரம் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். பொதுவாகவே பாலா இயக்கத்தில் நடிக்கும் நடிகர்கள் அனைவரையும் வாட்டி எடுப்பார் என்பது அனைவரும் அறிந்ததே.

இதையும் படிங்க:கமல் மகளுக்கே இப்படியொரு நிலைமையா!.. பப்ளிக்கில் ஸ்ருதிஹாசனிடம் அத்துமீறிய ரசிகர்.. என்ன ஆச்சு?

எந்த அளவு நடிகர்கள் கஷ்டப்பட்டு நடிக்கிறார்களோ அதற்கு ஏற்றார் போல் விருதுகளையும் அள்ளும். இவர் இயக்கத்தில் வெளியான பரதேசி திரைப்படம் பல விருதுகளை அள்ளியது. மேலும் இவர் நான் கடவுள், நாச்சியார், அவன் இவன் என்ற பல திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.

இவர் இயக்கத்தில் தற்போது தயாராகி வரும் திரைப்படம்தான் வனங்கான். இத்திரைப்படத்தில் அருண்விஜய் கதாநாயகனாகவும் அவருக்கு ஜோடியாக ரோஷினி பிரகாஷ் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை முதலில் நடிகர் சூர்யா நடித்து தயாரிக்கவிருந்தார்.

பின் பாலாவிற்கும் சூர்யாவிற்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக இப்படத்தில் இருந்து சூர்யா விலகி கொண்டார். பின் இப்படத்தினை பாலாவே தயாரித்து வருகிறார். இப்படத்திலிருந்து சூர்யா விலகி கொண்ட நிலையில் இதன் கதாநாயகனாக அருண்விஜய் நியமிக்கப்பட்டார்.

மேலும் இப்படத்தில் சமுத்திரக்கனி போன்ற முன்னணி  நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் படபிடிப்புகள் திருவண்ணாமலையில் நடைபெற்று வரும் நிலையில் இதன் இயக்குனரான பாலாவிற்கு சற்று உடல்நிலை சரியில்லாமல் போய் மயக்கம் போட்டுள்ளார்.

இதையும் படிங்க:சைலண்டா இருந்து அடிப்பேன்!.. மிரட்டலாக வெளிவந்த லியோ போஸ்டர்… இனி சரவெடிதான்…

பின் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். மருத்துவமனையில் முதலுதவி செய்தபின் மீண்டும் படபிடிப்புக்கு வந்துள்ளார். படப்பிடிப்பில் இருந்தவர்கள் அனைவரும் அவரை ஓய்வெடுக்க சொல்லியும் அவர் கேட்காமல் படபிடிப்பை தொடர்ந்து நடத்தியுள்ளார்.

பொதுவாக தனது படத்தில் நடிப்பவர்களை அதிக வேலை வாங்கும் இவர் எங்கு தன்னால் படபிடிப்பு தாமதமாகி விடுமோ என எண்ணி ஓய்வு கூட எடுக்காமல் உழைப்பது இவரின் தொழில்பக்தியை காட்டுகிறது. ஆனாலும் இவர் திடீரென நல்லவராய் மாறிவிட்டார் என நெட்டிசன்கள் மத்தியில் பேசப்படுகிறது.

இதையும் படிங்க:போதையில் மிஷ்கினிடம் சிக்கிய மணிரத்னம்… பார்ட்டின்னாலே தெறித்து ஓடும் பெரிய இயக்குனர்கள்…

google news
Continue Reading

More in Cinema News

To Top