
தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக இருப்பவர் ஷங்கர்.. ஜென்டில்மேன், காதலன், ஜீன்ஸ், இந்தியன் என அதிக பட்ஜெட்டில் படங்களை இயக்கி இந்திய அளவில் பேசப்பட்டவர். தமிழ் சினிமாவில் பாடல் காட்சிகளுக்காக பல வெளிநாடுகளுக்கும் சென்று படமாக்கிய பெருமை இவருக்கு உண்டு
க.. டந்த சில வருடங்களாக இவர் இயக்கத்தில் வெளியான படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை.. எனவே அடுத்து ஒரு வெற்றி படத்தை கொடுக்க வேண்டும் என்கிற முயற்சியில் இறங்கியிருக்கிறார்.. அனேகமாக ஷங்கரின் அடுத்த படைப்பு வேள்பாரியாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது..
ரஜினியை வைத்து சிவாஜி, எந்திரன், 2.0 ஆகிய மூன்று படங்களை ஷங்கர் இயக்கியிருக்கிறார்.. இந்த மூன்று படங்களுமே ரஜினி ரசிகர்களுக்கு பிடித்த படங்கள்தான். இந்நிலையில், ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த ஹோசிமின் என்பவர் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த போது ஒரு முக்கிய தகவலை பகிர்ந்து கொண்டார்
ஒருநாள் நான் அலுவலகத்தில் இருந்த போது ரஜினி சாரிடம் இருந்து போன் வந்தது.. ஷங்கர் சாரிடம் அவர் ஒரு அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார்.. அதன்பின் மேலே இருந்து கீழே வந்த ஷஞ்கர் சார் ‘எல்லா உதவி இயக்குனர்களையும் கூப்பிடுங்கள்.. நாளை நாம் ஊட்டிக்கு செல்கிறோம்.. ஒரு படத்திற்கான கதை டிஷ்கசன்’ என்றார்.. எல்லோரும் ஊட்டிக்கு சென்றோம்..
எழுத்தாளர் சுஜாதாவும் அந்த கதை விவாதத்தில் கலந்து கொண்டார்.. எல்லா இயக்குனர்களும் ஒவ்வொன்று சொன்னர்கள். ஒருகட்டத்தில் ஒரு கருவை ஷங்கர் சார் பிடித்தார். சொன்னால் நம்பமாட்டார்கள். மாலை 6 மணிக்கு கதை பேசத் தொடங்கி இரவு 9 மணிக்கு முழு கதையையும் உருவாக்கி விட்டார்கள்.. அதுதான் முதல்வன் திரைப்படம்.. மிரண்டு போய்விட்டேன்’ என்று கூறியிருக்கிறார். அதேநேரம், அந்த கதையியில் ரஜினி நடிக்காமல் அர்ஜூன் நடித்து சூப்பர் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.

முருகன். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக இணையதள செய்தி பிரிவில் பணியாற்றியவர். சினிமா, அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர். இந்த தளத்தில் கடந்த 10 ஆண்டுகளாக செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
மின் அஞ்சல் முகவரி mugas123@gmail.com


