More
Categories: Cinema News latest news

இயக்குனர் விக்ரமன் மனைவிக்கு நேர்ந்த சோகம்!.. கண்டுகொள்ளாத சினிமா உலகம்!..

புது வசந்தம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராய் அறிமுகமானவர் விக்ரமன். இவர் தமிழில் பல வெற்றித்திரைப்படங்களை கொடுத்துள்ளார். பெண்களை மையப்படுத்திய கதைகளை எடுப்பதில் வல்லவர். மேலும் இவர் குடும்ப பாங்கான் கதைகளையும் இயக்கியது உண்டு.

இவர் பூவே உனக்காக, சூர்ய வம்சம், பிரியமான தோழி போன்ற பல திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி கொண்டார். இவர் தமிழ் திரைப்படங்களை தவிர தெலுங்கிலும் பல திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

Advertising
Advertising

இதையும் வாசிங்க:சிக்கலில் தவித்த பி.வாசு குடும்பம்… தக்க சமயத்தில் உதவிய எம்ஜிஆர்… எப்படினு தெரியுமா?…

இவரது மனைவி ஜெயபிரியா. குச்சுப்புடி கலையில் மிக சிறந்தவராய் விளங்கியவர். பல மேடைகளில் தன்னுடைய திறமையை நிரூபித்தவர். மேலும் இவர் பல மாணவர்களுக்கும் தனது கலையை போதித்து வந்தவர். வீட்டிற்கு வரும் மாணவர்களுக்கு வயிராற சாப்பாடு கொடுத்து உதவும் குணம் உடையவர்.

ஒரு மாதத்திலேயே பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வாராம். இவ்வாறு இருந்த பெண்மணி கிட்டதட்ட 5 ஆண்டுகளாய் எழுந்து நிற்க கூட முடியாத ஒரு நிலையில் உள்ளார். இவருக்கு சில வருடங்களுக்கு முன் முதுகில் வலி ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு சென்றபோது அறுவை சிகிச்சை செய்ய வேண்டும், அவ்வாறு செய்தால் நீங்கள் விரைவிலேயே எழுந்து நன்றாக ஆடலாம் என போலி நம்பிக்கை கொடுத்து அறுவை சிகிச்சையும் செய்துள்ளனர். இதற்கு முதலில் ஜெயபிரியா தயங்கினாராம். ஆனால் விக்ரமன் அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் என கேட்டுகொண்டதற்கிணங்க இவரும் சம்மதித்துள்ளார்.

இதையும் வாசிங்க:கதையின் மீது நம்பிக்கை இல்லாமல் தயாரிப்பாளரே கொடுத்த தொல்லை… ஒரே படத்தால் ஓஹோ புகழ் கொடுத்த விக்ரமன்..!

ஆனால் அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட தவறினால் இவரால் எழுந்துகூட நிற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாம். 5 வருடங்களாய் இவர் படுத்தபடுக்கையாகதான் உள்ளாராம். மேலும் இவர் பல மருத்துவர்களிடம் விசாரித்தபோது இந்த பிரச்சினைக்கு தீர்வே கிடையாது என கூறிவிட்டனராம். மனைவி இந்த நிலையில் இருப்பதை கண்ட விக்ரமன் வேறு எந்த ஒரு படத்தையும் இயக்காமல் தனது மனைவியையே முழு நேரமும் கவனித்து கொண்டு வருகிறாராம்.

இவரது மருத்துவ செலவுக்கு இவர்கள் தாங்கள் சேர்த்த பல சொத்துகளை விற்றுதான் செலவு செய்கின்றனராம். ஆனால் இதுவரை சினிமா துறையில் இருந்து எவருமே தன்னை பார்க்க வந்தது இல்லை எனவும், எந்த வித உதவியையும் இதுவரை எவரும் செய்தது இல்லை எனவும் இவரது மனைவி தெரிவித்துள்ளார். ஆனால் கே.எஸ்.ரவிகுமார் தங்களுக்கு ஒரு நல்ல பக்கபலமாக இருப்பதாகவும் மேலும் விக்ரமின் மகனான விஜய் கனிஷ்காவிற்கு ஹிட் லிஸ்ட் எனும் படத்தின் மூலம் படவாய்ப்பினை கொடுத்து தங்களுக்கு பெரிய உதவியை செய்ததாகவும் கூறியுள்ளார்.

இதையும் வாசிங்க:அரவிந்த்சாமியை ஏமாற்றிய தனுஷ்… எல்லாம் அவரு படம் ஓடுனதுனால வந்த மெதப்பு போல…

Published by
amutha raja

Recent Posts