இவனையெல்லாம் ஏன் உள்ள விட்டீங்க!. சிவாஜியை அசிங்கப்படுத்திய எம்.ஜி.ஆர் பட இயக்குனர்…

Published on: January 22, 2024
sivaji
---Advertisement---

Sivaji: சினிமாவில் எந்த நடிகராக இருந்தாலும் சரி தனக்கென ஒரு இடத்தை பிடிக்கும் வரை போராட்டங்கள் இருக்கும். பல அவமானங்களை சந்திக்க வேண்டியிருக்கும். முகத்துக்கு நேராகவும், முதுகுக்கு பின்னாலேயேயும் பலரும் அசிங்கப்படுத்துவார்கள். அதையெல்லாம் மீறி நின்றால்தான் சினிமாவில் வெற்றிபெற முடியும்.

சிறு வயது முதலே நாடகங்களில் நடித்தவர்தான் சிவாஜி. நாடகங்களில் பல வேஷங்களை போட்டிருக்கிறார். பல நாடகங்களில் பெண் கதாபாத்திரங்களில் நடித்தவர்தான் சிவாஜி என்பது பலருக்கும் தெரியாது. இதை ஒரு பேட்டியில் அவரே சொல்லியிருக்கிறார். முதல் படமே ஏவிஎம் தயாரிப்பில் பராசக்தி எனும் படத்தில் நடித்தார்.

இதையும் படிங்க: சிவாஜி சொல்லியும் கேட்கல!.. கடைசியில காசு போனதுதான் மிச்சம்!.. ஏவிஎம் சந்தித்த தோல்வி…

இந்த படம் நடிக்கும்போதும் பல அவமானங்களை அவர் சந்தித்திருக்கிறார். சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில், சிவாஜி வேண்டாம் என சொல்லியிருக்கிறார் ஏவி மெய்யப்ப செட்டியார். ஆனால், அவர்களுடன் இணைந்து அப்படத்தை தயாரித்தவரும், சிவாஜியின் குருவுமான பெருமாள் முதலியார் அதற்கு சம்மதிக்கவில்லை.

parasakthi

சிவாஜிக்கு நல்ல சாப்பாடு கொடுத்து கொஞ்சம் வெயிட் போட வைத்து அதன்பின் அப்படத்தில் நடிக்க வைத்தார். அந்த படம் முடிந்து வெளியாகி ஹிட் அடித்தபின் சிவாஜிக்கு பல பட வாய்ப்புகள் வந்தது. அதில், நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார் சிவாஜி. சினிமாவில் அவர் போடாத வேஷங்களே இல்லை எனும் சொல்லுமளவுக்கு நடித்து ரசிகர்களின் மனதில் நடிகர் திலகமாகவும் மாறினார்.

இதையும் படிங்க: பிரிந்திருந்த சிவாஜி – கண்ணதாசனை சேர்த்து வைக்க இயக்குனர் செஞ்ச வேலை!.. நடந்தது இதுதான்..

பராசக்தி படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக சிவாஜி ஏவிஎம் ஸ்டுடியோவுக்கு ஒருமுறை வந்த போது அவரை பார்த்த இயக்குனர் ஒருவர் ‘இவனையெல்லாம் ஏன் உள்ள விடுறீங்க?’ என சிவாஜிக்கு கேட்கும்படியே கேட்டிருக்கிறார். ஆனாலும், சிவாஜி துவண்டுபோகவில்லை. தனது நடிப்பையே அதற்கு பதிலாக கொடுத்தார்.

சிவாஜியை அப்படியே கேட்ட அந்த இயக்குனர் பா.நீலகண்டன். பின்னாளின் எம்.ஜி.ஆரை வைத்து பல திரைப்படங்களை அவர் இயக்கியிருக்கிறார். அவர் கதை எழுதிய சபாஷ் மீனா படத்திற்காக சிவாஜியிடம் சென்று ‘இந்த படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும்’ என கேட்டவரும் அவர்தான். இதை தனது சுயசரிதை புத்தகத்தில் எழுதியுள்ள சிவாஜி ‘என்னை பார்த்து அப்படி கேட்டவர் என்னை நடிக்க அழைத்தார் எனில் வெற்றி யாருக்கு?’ என குறிப்பிட்டிருக்கிறார்.

இதையும் படிங்க: நாடகத்தில் சிவாஜிக்கு கிடைத்த அந்த வேடம்!. ஆனாலும் ரசித்து செய்து கைத்தட்டலை வாங்கிய நடிகர் திலகம்..

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.