விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 மாதங்களாக ஒளிபரப்பான பிக்பாஸ் 9வது சீசன் இன்று இறுதி கட்டத்தை எட்டியது.

இந்த சீசனில் இறுதியில் நான்கு போட்டியாளர்கள் இருந்த நிலையில் திவ்யா கணேஷ் அதிக வாக்குகள் பெற்று பிக்பாஸ் டைட்டில் வின்னராக தேர்வானார். இவர் வைல்ட் கார்ட் எண்ட்ரீயாக வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கமாக டைட்டில் வின்னருக்கு ரூ. 50 லட்சம் பரிசாக கொடுப்பது வழக்கம். ஆனால் இந்த முறை கூடுதலாக ஒரு சிறப்பு பரிசும் கொடுக்கப்பட்டது. இந்த ஷோவின் ஸ்பான்சர் ஆக இருக்கும் மாருதி சுசுகி நிறுவனம் தனது லேட்டஸ்ட் கார் ஒன்றை திவ்யாவுக்கு பரிசாக கொடுத்து இருக்கிறது.




