Connect with us
dhushara vijayan

latest news

பா ரஞ்சித்தை திட்டிய துஷாரா விஜயன் !.. வாய்ப்பு கொடுக்க வந்தவரை இப்படி வசைபாடலாமா..??

இப்படித்தான் எனக்கு சார்பட்டா பரம்பரையில் வாய்ப்பு கிடைத்தது!.. துஷாரா விஜயன் ஓபன் டாக்!..

நடிகை துஷாரா விஜயன் சார்பட்டா பரம்பரை எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் அனைத்து தமிழ் ரசிகர்களாலும் வெகுவாக பாராட்டப்பட்டார். இதனை அடுத்து இவருக்கு அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் பா ரஞ்சித் திரைப்படங்களில் வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தது. இந்த நிலையில் துஷாரா விஜயன் தான் எப்படி சார்பட்டா பரம்பரை படத்தில் தனக்கு வாய்ப்பு கிடைத்ததை பற்றி ஒரு நேர்காணலில் கலகலப்பாக கூறியுள்ளார்.

துஷாரா விஜயன்

துஷாரா விஜயன்

நடிகை துஷாரா விஜயன் 2019 ஆம் ஆண்டு போதை ஏறி புத்தி மாறி எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இவர் நடித்த முதல் படமே தோல்வி படமாக அமைந்ததை எடுத்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு சார்பட்டா பரம்பரை எனும் திரைப்படத்தை இயக்குனர் பா ரஞ்சித் இயக்கியிருந்தார். இந்த படத்தில் நடிகர் ஆர்யா அவர்களுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. தனக்கு கொடுக்கப்பட்டிருந்த கதாபாத்திரத்தில் சிறப்பான தனது நடிப்பினை வெளிப்படுத்தி அனைவராலும் பாராட்டைப் பெற்றார். இந்த நிலையில் இந்த படம் மாபெரும் வெற்றி படமாக ஒடி டி தளங்களில் வலம் வந்தது.

இதையும் படிங்க-சிவகார்த்திகேயன், யோகிபாபு ரெண்டு பேருமே கை விட்டுட்டாங்க… நம்பி ஏமாந்த ப்ளாக் பாண்டி!..

துஷாரா விஜயன்

துஷாரா விஜயன்

மேலும் இந்த படத்தில் நடித்ததன் மூலம் நிறைய விருதுகளும் இவருக்கு கிடைத்தது. இதனை அடுத்து இவருக்கு அன்புள்ள கில்லி எனும் திரைப்படத்திலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் 2022 ஆம் ஆண்டு நட்சத்திரம் நகர்கிறது எனும் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தை இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் இயக்கியிருந்தார். மேலும் இந்த படத்தில் தனது எதார்த்தமான நடிப்பினை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக துஷாரா விஜயன் திகழ்ந்தார்.

மேலும் 2023 ஆம் ஆண்டு கழுவேத்தி மூக்கன் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.இந்த படம் போதிய வரவேற்பு இன்று தோல்வி அமைந்தது. இதனை அடுத்து இனி வரும் திரைப்படங்களில் மிகுந்த கவனத்துடன் கதாபாத்திரங்களை தேர்வு செய்வதாக பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியிருந்தார். மேலும் அவர் தான் சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் தனக்கு எப்படி எனக்கு வாய்ப்பு கிடைத்தது என்பதை பற்றியும் கலகலப்பாக ஒரு நேர்காணலில் கூறியிருந்தார்.

துஷாரா விஜயன்

துஷாரா விஜயன்

அவர் அந்த நேர்காணலில் கூறியதாவது, முதல் முதலாக எனக்கு சார்பட்டா பரம்பரையில் எப்படி வாய்ப்பு கிடைத்தது என்றால், நான் ஒரு நாள் வீட்டில் இருந்தபோது எனக்கு இயக்குனர் பா ரஞ்சித் அவர்களிடம் இருந்து மொபைல் மூலம் அழைப்பு வந்தது, ஹலோ நான் பா ரஞ்சித் பேசுகிறேன் அடுத்து நான் எடுக்கப் போகும் சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் ஹீரோயின் நீதான் நடிக்க தயாரா என்று கேட்டார், உடனே அதற்கு ஹலோ யார் பேசுறீங்க சும்மா கலாய்க்காதீங்க ஃபோனை வைங்க அப்படின்னு சொல்லிட்டு போன கட் பண்ணிட்டேன்.

பிறகு எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது ஒருவேளை பா ரஞ்சித் அவர்கள் எனக்கு போன் பண்ணி இருந்தா?? என்ன பண்றது அதனால மீண்டும் என்னோட சகோதரியிடம் அவருக்கு கால் பண்ண சொன்னேன். அவளும் கால் பண்ணி இருந்தா உடனே அவர் கால் அட்டென்ட் பண்ணிட்டு அந்த பொண்ணுக்கு என்ன இவ்வளவு திமிரா ஒரு வாய்ப்பு கொடுத்தா இப்படி தான் பேசுவாங்களா அப்படின்னு பா ரஞ்சித் அவர்கள் என்னுடைய சகோதரியிடம் கூறினார். அப்புறம் தான் எனக்கு தெரிந்தது என்னுடன் பேசியது பா ரஞ்சித் அவர்கள் தான் என்று உடனே சார்!..சார்!.. தயவு செய்து என்னை மன்னிச்சுக்கோங்க. நான் இன்னும் அரை மணி நேரத்தில் உங்களுடைய ஆபீஸ்ல வந்து நிற்பேன் யாரோ பிராங் பண்றாங்கன்னு நெனச்சு நான் அப்படி பேசிட்டேன் மன்னிச்சுக்கோங்க அப்படின்னு சொல்லிட்டு கால கட் பண்ணிட்டேன்.இப்படித்தான் எனக்கு சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது இன்று வரை என்னால் அந்த நிகழ்வை என்னால் மறக்க முடியாது.

இதையும் படிங்க-கண்ணாதாசனுக்கு அந்த பெயர் எப்படி வந்தது தெரியுமா?!.. இவ்வளவு கதை இருக்கா!..

google news
Continue Reading

More in latest news

To Top