ரஜினி பேச்சால் கடுப்பான லோகியும், நெல்சனும்!.. தலைவரு என்ன சொன்னாரு?

த.செ.ஞானவேல் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிப்பில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் வேட்டையன். படத்தின் புரொமோஷன் பணிகள் நடந்து வருகிறது. அதன் முதல் கட்டமாக 2 சிங்கிள்கள் வந்துவிட்டது.

ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்றது. இந்த நிலையில் வேட்டையன் பட ஆடியோ லாஞ்ச்ல ரஜினிகாந்த் பேசியது பலத்த சர்ச்சைக்குள்ளானது. என்னன்னு பார்க்கலாமா...

ஒரு காலத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி பேசினாலே அது பாராட்டப்படும். ஆனால் சமீபத்தில் அவர் எது பேசினாலும் பயங்கரமா சர்ச்சை ஆகியிருக்கு. இதுக்கு முன்னாடி ஜெயிலர் படத்து ஆடியோ லாஞ்ச்ல காக்கா கழுகு கதை பயங்கரமா சர்ச்சை ஆச்சு.


வேட்டையன் ஆடியோ லாஞ்ச்லயும் மனம் விட்டுப் பேசுனது வைரலானது. அவர் என்ன பேசினாருன்னா ஒரு படத்தை பெரிய அளவில் ஹிட் கொடுத்துவிட்டு அடுத்தப் படத்தைப் பண்றதுக்கு ரொம்ப பயமா இருக்கு. அது மட்டுமல்லாம இப்ப எல்லாம் மாஸ் ஹீரோக்களுக்குப் படம் பண்றதுக்கு இயக்குனர்கள் ரொம்பவே குறைஞ்சிப் போயிட்டாங்க.

அவங்களைப் பயன்படுத்தத் தெரியல. இப்ப இந்த மாதிரி இயக்குனர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டு இருக்கு. அது இந்த நேரம் வந்துருக்கக்கூடாதுன்னும் சொல்லி இருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் எல்லாம் கடுப்பாயிட்டாங்க. ரஜினிக்கு ஆக்ஷன் டைரக்டர்கள் அமைஞ்சிருக்காங்க. இதுக்கு முன்னாடி நெல்சனின் ஜெயிலர் படம். இது அழகான ஆக்ஷன் கதை.

இப்போ நடிக்கிறது அதிரி புதிரி ஆக்ஷன் படம் கூலி. லோகேஷ் தான் இயக்குறாரு. இப்போ உள்ள டைரக்டர்கள் ராஜமவுலி, பிரசாந்த் நீல், லோகேஷ், அட்லீன்னு எல்லாரும் படம் முழுக்க வயலன்ஸ், ஆக்ஷன் படங்களாகத் தான் இருக்கு.

அப்படி இருக்கும்போது ரஜினி ஏன் இப்படி சொன்னாருங்கறது தான் உறுத்தலா இருக்கு. கார்த்திக் சுப்புராஜ் கூட அவருக்காகப் பார்த்துப் பார்த்துப் படம் பண்ணினாரு. ஒருவேளை ரஜினிக்குப் பழைய ஸ்டைல்ல கே.எஸ்.ரவிக்குமார் மாதிரி இயக்குனர்களைத் தான் விரும்புறாரான்னும் தெரியல.

Related Articles
Next Story
Share it