சிம்பு பண்ணிய துரோகம்! துடைக்க வந்த அஜித்.. ‘குட் பேட் அக்லி’யில் இவ்ளோ விஷயம் இருக்கா?

Good Bad Ugly: குட் பேட் அக்லி திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து அஜித்தை பற்றிய பல அப்டேட்டுகள் சமூக வலைதளங்களில் வந்த வண்ணம் இருக்கின்றன. முன்பெல்லாம் எந்த ஒரு அப்டேட்டும் வராமல் அஜித் ரசிகர்களை சம்பந்தப்பட்ட படக்குகுழு கடுப்பாக்கி வந்ததை நாம் பார்க்க முடிந்தது. அதற்கு காரணம் அஜித் தான் என்றும் அவர்தான் எந்த ஒரு அப்டேட்டையும் கொடுக்க வேண்டாம் என்று சொல்வதாகவும் சில செய்திகள் அப்போது வெளிவந்தன.

ஆனால் சமீபகாலமாக அஜித் சம்பந்தப்பட்ட பல புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. சமீபத்தில் கூட குட் பேட் அக்லி படப்பிடிப்பு செட்டில் இருந்து அஜித்தின் புகைப்படம் வெளியானது. இன்று அதே செட்டில் ஆதிக் கையில் மைக்கை தூக்கிப் பிடித்துக் கொண்டு நடக்கும் மாதிரியான ஒரு புகைப்படம் வெளியாகியிருக்கிறது. இப்படி அடுத்தடுத்த அப்டேட்டுகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இதற்கு காரணம் என்ன என வலைப்பேச்சு சக்திவேல் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க: திரும்புன இடமெல்லாம் கன்னிவெடி வச்சா எப்படி? கைது செய்யப்பட்ட வாசன் கதறல்…

அதாவது ஒரு படத்தைப் பற்றிய செய்திகள் வெளியில் தெரிந்தால் தான் மக்களுக்கும் அந்த படத்தை பற்றிய ஒரு அறிவும் ஒரு ஆர்வமும் அவர்களுக்குள் வரும். அப்போதுதான் படத்தை பார்க்க தியேட்டருக்கு அவர்கள் வருவார்கள்.. இப்படி தெரிந்தால் தான் படத்தை வாங்கும் விநியோகஸ்தர்களும் பெரிய அளவில் பணத்தை போட்டு படத்தை வாங்க முன் வருவார்கள். அதைப்போல படத்தின் தயாரிப்பாளர்களும் கோடி கணக்கில் பணத்தை போட்டு படத்தை எடுக்கின்றனர்.

பிரமோஷனுக்கு வரவேண்டாம். ஆனால் ஒரு அப்டேட் ஆவது கொடுத்தால் தான் அவர்களால் வியாபாரம் பண்ண முடியும். இதனை கருதியே அஜித் படத்தை பற்றிய அப்டேட்டுகள் கேட்காமலேயே வெளி வருகின்றன என சக்திவேல் கூறியிருக்கிறார். அதுபோல இந்த குட் பேட் அக்லி திரைப்படம் சிம்பு நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் மிச்சம் சொச்சமாக கூட இருக்கலாம் என்ற ஒரு புரளியையும் கிளப்பி இருக்கிறார்.

இதையும் படிங்க: தக் லைஃப் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்.. கமல், சிம்பு சேர்ந்து செய்த அலப்பறை.. செம ட்ரீட் இருக்கு!..

ஏனெனில் சிம்புவை வைத்து ஆதிக் எடுத்த படம் தான் AAA. அந்த படத்தின் போது ஆதிக் நினைத்த மாதிரி படத்தில் எதுவுமே எடுக்க முடியவில்லை. அதற்கு காரணம் சிம்பு. படப்பிடிப்பிற்கு ஒழுங்காக வராதது. சொன்ன தேதியில் கால்ஷீட் கொடுக்காதது என ஆதிக்கை ஒரு வழி பண்ணி விட்டார் சிம்பு. அதனால் அவர் வந்த நேரத்தை மட்டும் பயன்படுத்திக் கொண்டு படத்தை எடுத்து முடித்து விட்டார் ஆதிக். படமோ பெரிய பிளாப்.

இந்த நிலையில் அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க ஆதிக் திட்டமிட்டு இருந்தார். அந்த கதைதான் ஒரு வேளை இந்த குட் பேட் அக்லியாக கூட இருக்கலாம் என வலைப்பேச்சு சக்திவேல் கூறி இருக்கிறார். ஆனால் ஒரு தரப்பினர் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் உண்மை கதையே குட் பேட் அக்லி படத்தின் கதைதான் என்றும் கூறி வருகிறார்கள்.

இதையும் படிங்க: ஒரு பாட்டுக்கு 300 கோடியா? இளையராஜாவே பரவாயில்ல போலயே.. பைத்தியம் முத்திரிச்சுடோய்

மேலும் அஜித் ஆதிக் முன்பு சந்தித்துக் கொண்ட போது சிம்புவால் தான் பட்ட கஷ்டத்தை ஆதிக் அஜித்திடம் கூறியதாகவும் சரி பார்த்துக் கொள்ளலாம் என்று அஜித் சொன்னதாகவும் ஒரு செய்தி இணையத்தில் வெளியானது. ஒரு வேளை அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் உண்மையான கதை இதுதான் என வைத்துக் கொண்டால் சிம்புவால் ஏற்பட்ட நஷ்டத்தை இந்த படத்தின் மூலம் அஜித் சரி செய்ய வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

 

Related Articles

Next Story