More
Read more!
Categories: Cinema News latest news

அது மட்டும் இல்லனா இந்நேரம் இறந்திருப்பேன்… உயிர் பிழைச்சதே அதியசம்.. கோர விபத்தில் சிக்கிய சீரியல் நடிகை உருக்கம்

சீரியல் நடிகை வைஷாலி தனிகா தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முத்தழகு சீரியலில் நடித்து வருகிறார். இதற்கு முன்னார் ராஜா ராணி, நம்ம வீட்டு பொண்ணு, கோகுலத்தில் சீதை உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார்.

இவர் சமூக வலைளங்களில் மிகவும் பிரபலமானவர். அவர் சமீபத்தில் ஒரு கோர விபத்தில் சிக்கி நூலிழையில் உயிர் தப்பியதாக தெரிவித்துள்ளார். இது குறித்து ஒரு வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

Advertising
Advertising

இதையும் படிங்க- கணவர் இறந்ததை யாரிடமும் சொல்லவில்லை.. ஆமாம் நான் க்ளாமரா தான் பண்றேன்- உண்மையை உடைத்த சீரியல் நடிகை

காரில் தென்காசியிலிருந்து திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்த போது, இந்த விபத்து ஏற்பட்டதாகவும், ஓட்டுநரின் கவனக்குறைவால், கார் வளைவில் முந்தும்போது, பயங்கரமான விபத்துக்குள்ளானது. கார் குப்பற கவிழ்ந்துவிட்டது.

நான் மட்டும் சீட் பெல்ட் போடவில்லை என்றால் உயிரோடு இருந்திருப்பேனே என்பது சந்தேகம் தான். சீட் பெல்ட்டும், ஏர் பேக்கும் தான் என்னை காப்பாற்றியது. இல்லையென்றால் நான் பிழைத்திருப்பதே சந்தேகம் தான். இதற்கு முன்னர் யாராவது சீட் பெல்ட் போட சொன்னால், நான் அதை அலட்சியம் செய்துவிடுவேன்.

ஆனால் இப்போது புரிகிறது. நீங்களும் எப்போதும் சீட் பெல்ட் அணிந்து பயணம் செய்யுங்கள். நெடுஞ்சாலையில் செல்லும் போது பொறுமையாக செல்லுங்கள். எனக்கு பெரிதாக அடிப்படவில்லை. கழுத்தில் கொஞ்சம் சிராய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மற்றும் சுளுக்கு உள்ளது. மற்றபடி நான் நன்றாக இருக்கிறேன். ஓரிரு நாட்களில் குணமாகிவிடுவேன். என் மீது அக்கரை கொண்டு நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி என்று சீரியல் நடிகை வைஷாலி தனிகா அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க- விஜய் ஆண்டனி படத்துல என்ன மனுஷியா கூட மதிக்கல.. நம்ப வச்சி ஏமாத்திட்டாங்க- புலம்பி தள்ளிய சீரியல் நடிகை..

Published by
prabhanjani

Recent Posts