Connect with us

Cinema News

இளையராஜாவின் சொத்து யுவனுக்கே இல்லையா? இது என்னங்க புது உருட்டா இருக்கு… ஆனா விஷயமே வேற!

Ilayaraja: இளையராஜாவின் சொத்துகளை அவர் தன்னுடைய ஆர்கஸ்ட்ரா கலைஞர்களுக்கு பிரித்து கொடுக்க இருப்பதாக ஒரு தகவல் பரவிய நிலையில், அதுகுறித்து அதிர்ச்சிகரமான விஷயங்களை பிரபல திரை  விமர்சகர் அந்தணன் தெரிவித்து இருக்கிறார்.

இதுகுறித்து அந்தணன் பேசும் போது, இளையராஜாவின் ரசிகர்கள் உலகம் முழுவதும் இருக்கின்றனர். அவர்கள் சில நேரங்களில் தப்பான விஷயங்களை பரப்புவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அப்படி சமீபத்தில் ஒரு விஷயம் பரவுகிறது. அதாவது இளையராஜா காப்புரிமைக்காக இவ்வளவு போராடுகிறார்.

இதையும் படிங்க: எனக்கு சுயமரியாதை இருக்கு…கலங்கும் பாக்கியா.. பயத்தில் கோபி… கோபத்தில் ராதிகா…

ஆனால் அது அவருக்காக இல்லையாம். இசை கலைஞர்களுக்கு தான் காப்புரிமையில் இருந்து வரும் தொகை அனைத்தும் என இளையராஜா உயில் எழுதி வைத்துவிட்டாராம். இது உண்மையான விஷயமே இல்லை. தீனா இசை கலைஞர்கள் சங்கத்தில் இருந்த போது இருவருக்கும் ஒரு நெருக்கம் இருந்தது. முதலில் இசை அமைப்பாளர் சங்கத்தினை உடைத்துவிட்டு என் முழு செலவில் கட்டி தருவதாக இளையராஜா சொன்னாராம். 

இதுவே தீனா அவருக்கு சப்போர்ட் செய்தாராம். அந்த பணத்தினை இசை நிகழ்ச்சி நடத்தி அதில் வரும் தொகையை தருவதாக சொன்னாராம். சாதாரண இசை மேடையில் இளையராஜா பாடல் பாடப்பட்டால் அதை சங்க உறுப்பினர்கள் கவனித்து அந்த தொகையை வாங்கி கொள்ள வேண்டும். இதனால் பல கோடி வரும் என்பது இளையராஜா கணிப்பு.

இதையும் படிங்க: இன்று வரை தன் படத்தையேப் பார்க்காத டி.ராஜேந்தர்… காதல் தோல்வி படத்திற்குப் பின் இப்படியும் ஒரு சோகமா..?

இசை நிகழ்ச்சியும் பிரம்மாண்டமாக நடந்தது. அதை தொடர்ந்து சில நாட்கள் கழித்து இளையராஜா தரப்பில் இருந்து ஒருவர் வருகிறார். காசு கொடுக்க வந்திருக்கிறார் என நினைத்தால் சங்க கட்டிடத்தின் மேல் மாடியில் இளையராஜா தங்கி கொள்ள நினைப்பதாக கூறவும் தீனாவுக்கே ஷாக்காகி விட்டதாம்.

பிரசாத் பிரச்னையெல்லாம் கண் முன்னால் வந்து போகி இருக்கும் தானே. ஆனால் அப்போ சம்மந்தப்பட்டவர்களை விட இளையராஜாவுக்கு தான் சப்போர்ட் அதிகமாக இருந்தது. இதனால் தீனா மீண்டும் பிரச்னையை இழுத்து கொள்ள விரும்பவில்லை. அதனால் முடியாது என்றாராம். இதனால் இளையராஜா சங்க கட்டிடத்தினை கட்டும் முடிவில் இருந்து பின்வாங்கினாராம்.

இதையும் படிங்க: பணத்துக்காக இவ்ளோ மலிவா போயிட்டாரே! சுத்த அயோக்கியத்தனம்.. இசைஞானிக்கு சவுக்கடி கொடுத்த பிரபலம்

ஆனால் சொன்ன தொகையை கூட மட்டும் இல்லாமல் தீனா பெருமையாக 2 லட்சம் தருவார் என சொன்னதை கூட இளையராஜா சங்கத்துக்கு கொடுக்கவில்லையாம். இதுமட்டுமல்லாமல் கார்த்தி ராஜா சொத்தை பிரித்து கொடுங்கள் எனக் கேட்டதுக்கே இளையராஜா என்னால் முடியவே முடியாது எனக் கூறிவிட்டாராம்.

இதனால் மூத்த மகனான கார்த்தி ராஜா கோவிச்சிக்கிட்டு வீட்டை விட்டே கிளம்பிவிட்டாராம். மகனுக்கே இந்த நிலைமைனா எப்படி சங்க கலைஞர்களுக்காக யோசித்து எழுதி வைப்பார். இதெல்லாம் பொய் தான். இளையராஜா செய்யும் ஆட்களே இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top