Connect with us

Cinema News

பொங்கலுக்கு கூட நிம்மதியா இருக்க விடமாட்டாரே!… சத்தம் போட்ட ரஜினி பக்கத்து வீட்டு பெண்!…

Rajinikanth: திருநாட்களுக்கு பெரிய நட்சத்திரங்களின் வீடுகளுக்கு முன்னால் ரசிகர்கள் கூடுவது வழக்கமான விஷயமாக தான் இருக்கிறது. அந்த வகையில் ரஜினியை இன்று பார்க்க வந்த ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சியே காத்து இருந்ததாம். அதுகுறித்த சுவாரஸ்ய தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. 

பொங்கல் தினத்தினை ஒட்டி ரசிகர்கள் ரஜினிகாந்தினை இல்லத்தின் வாசலில் கோஷமிட்டு கொண்டு இருந்தனர். எல்லா நாட்களிலுமே இது நடக்கும். வெளியில் வரும் ரஜினி கைக்காட்டி வாழ்த்து சொல்லி விட்டு செல்வார். எல்லா பொங்கலை மாதிரியே இன்று ரசிகர்கள் கூடி கோஷமிட்டனர்.

இதையும் படிங்க: கேப்டன் மில்லருக்கு டஃப் கொடுக்கும் தளபதி!.. கோட் படத்தின் புது போஸ்டர் பாருங்க…

ஆனால் திடீரென பக்கத்து வீட்டு பெண் வெளியில் வந்து திட்ட தொடங்கிவிட்டார். தலைவா, தலைவானு கத்திட்டே இருப்பாங்க. இங்க சுத்தி இருக்க 23 வீட்டை போல யாரும் கஷ்டப்படவே மாட்டோம். தலைவர் வீட்டை திறந்து உள்ள விடுங்களே. காலையில் பண்டிகை நாளில் இப்படி கத்தினால் எப்படி கொண்டாட முடியும் என கடுமையாக வாதிட்டு இருக்கிறார்.

நாங்களும் தான் வரி கட்றோம். எங்களுக்கு எதுவுமே இல்ல. அவருக்கு மட்டும் என்ன ஸ்பெஷல் உபசரிப்பு. வெறுத்துட்டோம் என அவர் காட்டமாக பேசும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த விவாதம் வைரலான நிலையில் அந்த பெண்ணுக்கு சிலர் ஆதரவாக பேசியும் ரஜினியை கண்டித்தும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

இதையும் படிங்க: ரெண்டு படம் நடிச்சிட்டா டைரக்டர் ஆயிடலாமா?!.. சீண்டிய நபருக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த பதிலடி..

google news
Continue Reading

More in Cinema News

To Top