Connect with us

Cinema History

காதலியும், மனைவியும்… காதலுக்கு மரியாதை கிளைமேக்ஸில் இந்த விஷயத்தை கவனிச்சீங்களா!..

Kadhalukku Mariyathai: தமிழ் சினிமாவில் விஜயின் கேரியரையே மாற்றிய ஒரு படம் என்றால் அது காதலுக்கு மரியாதை தான். ஆனால் அந்த படத்தில் ஒரு உண்மை காதல் கதையும் இருக்கிறது என்றால் ஆச்சரியம் தானே. அப்படிப்பட்ட ஒரு தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

படத்தின் கிளைமேக்ஸில் ஷாலினியின் அம்மாவாக நடித்த கேபிஏசி.லலிதாவும், ஸ்ரீவித்யாவும் பேசிக்கொள்வார்கள். வித்யா லலிதாவை நோக்கி நடந்ததெல்லாம் மறந்துடுங்க என்பார். இதுக்கு லலிதா, சேச்சே, இப்போ எதுக்கு அதெல்லாம். மனசுக்கு சங்கடம் தானே. எல்லோரும் எல்லாத்தையும் மறக்கணும்கிறது தான் என்னோட பிரார்த்தனையே என்பார்.

இதையும் படிங்க: அருண் விஜய்யை திருத்திய விஜயகாந்த் மறைவு.. அஞ்சலி செலுத்தியதும் என்ன சொன்னார் தெரியுமா?

எல்லா காட்சியை மாதிரி இதுனு நினைச்சா அதான் இல்லை. இவங்க இரண்டு பேருக்கும் இடையில் வாழ்க்கையே புயல் அடித்து இருக்கிறது. இயக்குனர் பரதனும், வித்யாவும் காதலித்து வந்தனர். ஆனால் இரு வீட்டு தரப்பிலும் எதிர்ப்பு தான் வந்ததாம். பரதன் நேரே லலிதாவின் வீட்டுக்கு சென்று ஸ்ரீவித்யாவிடம் போனில் பேசுவாராம். 

ஆனால் பரதனுக்கு அப்போதைய சமயத்தில் இன்னோரு காதலும் வந்ததாம். அது வேறு யாருமில்லை சீரியல் நடிகையான சாந்தி வில்லியம்ஸ் தான். இதனால், லலிதா மற்றும் ஸ்ரீவித்யா படப்பிடிப்புக்கு சென்ற பரதன் காதலை திடீரென முறித்து கொண்டாராம். ஸ்ரீவித்யா கண்ணீர் விட்டு இருக்கிறார். ஆனால் அவருக்கு அந்த காதலும் நடக்கவில்லை.

இதையும் படிங்க: 16 லட்சத்துடன் எடுக்கப்பட்ட பிக்பாஸ் பணப்பெட்டி… செம டீல் தான்!.. அம்மணி உஷாரு தான் போலயே!..

ஸ்ரீவித்யாவுக்கு ஒரு வீட்டை எடுத்து கொடுத்து செட்டில் செய்தார். பரதன் இரண்டு வீட்டுக்கும் போய் வந்தாராம். லலிதாவின் அழுகை அவர்களை சட்டை செய்யவில்லை. ஆனால், கடைசியில் ஒரு நாளில் குடிக்கு அடிமையான பரதன் 51 நாள் கோமாவில் இருந்து இறந்தே போனார். வித்யாவின் கடைசி காலமும் மோசமாகவே முடிந்தது. அவர்கள் வாழ்க்கை அந்த ஒற்றை வரியில் இருந்து இருக்கும்.

google news
Continue Reading

More in Cinema History

To Top