மண்வாசனை படம் பார்த்து கமல்ஹாசன் செய்த வேலை!.. நெகிழ்ந்து போன நடிகை!..

by சிவா |   ( Updated:2024-01-08 00:22:06  )
pandiyan
X

Bharathiraja: இயக்குனர் பாரதிராஜா பல திரைப்படங்களை இயக்கியிருந்தாலும் மண் வாசனை படத்தை எடுக்கும்போது அவர் பல சிக்கல்களை சந்தித்தார். அதேபோல், பாரதிராஜாவின் இயக்கத்தில் அதிக நாட்கள் படப்பிடிப்பு நடந்த திரைப்படமும் மண்வாசனைதான். இந்த படத்தை தயாரித்தவர் பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன்.

இந்த படம் பற்றி பல தகவல்களை அவர் சமீபத்தில் பகிர்ந்துகொண்டார். அது பற்றி இங்கே பார்ப்போம். பதினாறு வயதினிலே படத்தில் இடம் பெற்ற ‘செந்தூரப்பூவே’ பாடல் காட்சியை எனக்கு பாரதிராஜா போட்டு காட்டியபோது நாம் சொந்தமாக படம் எடுத்தால் இவர்தான் இயக்குனர் என முடிவெடுத்தேன். சில வருடங்களில் 5 ஆயிரம் காசு சேர்த்து அவருக்கு முன் தொகையாக கொடுத்துவிட்டேன்.

இதையும் படிங்க: ரஜினி, கமல் நடிக்க வேண்டிய படத்தில் வேற ஹீரோ!.. ஆனாலும் சொல்லி அடித்த பாரதிராஜா…

ஆனால், அதன்பின் 3 வருடங்கள் அவர் வேறுபடங்களை இயக்கினார். ஒருவழியாக மண்வாசனை படம் உருவானது. ஆனால், கதாநாயகன் கிடைக்கவில்லை. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே நின்றுகொண்டிருந்த பாண்டியனை பார்த்ததும் இவன்தான் என் படத்தின் ஹீரோ என பாரதிராஜா சொன்னார். அவரோடு எவ்வளவு பேசியும் அவர் அதில் உறுதியாக இருந்தார்.

தேனி அருகே பல நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. பல தடங்கல்களும் வந்தது. ஆனாலும் படத்தை எடுத்து முடித்தார். பாண்டியனை பாரதிராஜாவை தவிர யாரும் நம்பவில்லை. ஆனாலும், பாண்டியன் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு நடிகராக மாறியதை பார்த்த எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. சில வினியோகஸ்தர்கள் கொடுத்த அட்வான்ஸ் பணத்தை திருப்பி கேட்ட சம்பவமும் நடந்தது.

இதையும் படிங்க: ஹீரோவை தேடித்தேடி ஓய்ந்து போன பாரதிராஜா!.. விபத்து மூலம் கிடைத்த ஹீரோ.. இது நவரச நாயகன் கதை!..

இந்த படம் உருவானதும் கமல்ஹாசனுக்கு இப்படத்தை போட்டு காட்டினார் பாரதிராஜா. படத்தை பார்த்த கமல் அப்படத்தில் அற்புதமாக நடித்திருந்த காந்திமதியை கட்டித்தழுவி பாராட்டினார். அன்று மாலையே ஒரு விலை உயர்ந்த பட்டுப்புடவையோடு, அவரை பாராட்டி ஒரு கடிதத்தையும் அவருக்கு கொடுத்தார்.

மண்வாசனை படம் வெளியாக ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று நல்ல வசூலை பெற்றது. மதுரையில் ஒரு திரையரங்கில் 234 நாட்கள் இப்படம் ஓடி சாதனை படைத்தது’. தன்னம்பிக்கையும், திறமையும் இருந்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு பாரதிராஜாவே உதாரணம். அப்படத்திற்கு பின் பாண்டியன் சுமார் 50 படங்களில் ஹீரோவாக நடித்தார். 30க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் டூயட் பாடினார்’ என சித்ரா லட்சுமணன் கூறியிருந்தார்.

இதையும் படிங்க: ஆசையாக வாய்ப்பு கேட்ட ரஜினி.. கைய விரிச்ச பாரதிராஜா.. கடைசியில நடந்தது இதுதான்!…

Next Story