Connect with us

Cinema History

பொன்னியின் செல்வன் படத்தால் அந்த பட வாய்ப்பை இழந்துட்டேன்.. – வருத்தப்பட்ட கார்த்தி…

தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஹிட் படங்களாக கொடுத்து வருகிறார் நடிகர் கார்த்தி. சமீபத்தில் வெளியான அவரது திரைப்படங்கள் யாவுமே தமிழ் சினிமாவில் நல்ல வெற்றியை கொடுத்துள்ளன. இத்தனைக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் வந்த சமயத்தில் தொடர்ச்சியாக அவரது திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வந்தன.

விருமன், சர்தார், பொன்னியின் செல்வன் என வரிசையாக அனைத்து படங்களும் ஹிட் கொடுத்ததை அடுத்து தற்சமயம் நடிகர் கார்த்தியின் மார்க்கெட் அதிகரித்துள்ளது. அடுத்து பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வரவிருக்கிறது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு வாய்ப்பு கிடைத்ததன் மூலம் இந்திய அளவில் பிரபலமாகியுள்ளார் கார்த்தி. ஆனால் பொன்னியின் செல்வன் படத்தில் வாய்ப்புகளை பெறுவதற்காக சில முக்கிய படங்களின் வாய்ப்பை இழந்துள்ளார் கார்த்தி.

கார்த்தி மிஸ் செய்த படம்:

2021 ஆம் ஆண்டு இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து சர்பட்டா பரம்பரை திரைப்படம் வெளியானது. கபாலி படத்திற்கு முன்பே சர்பட்டா பரம்பரை படத்தின் கதையை எழுதிவிட்டார் ரஞ்சித். அப்போது இந்த படத்திற்கு கதை நாயகனாக கார்த்திதான் தேர்வாகி இருந்தார்.

ஆனால் ரஜினியிடம் வாய்ப்பு வந்ததால் அப்போது அதை படமாக்கவில்லை பா.ரஞ்சித். இந்த நிலையில் 2020 ஆம் ஆண்டு மீண்டும் அதை படமாக்கலாம் என பா.ரஞ்சித் முன் வந்தபோது கார்த்தி பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் கமிட் ஆகிவிட்டார்.

இதனால் பா.ரஞ்சித் ஆர்யாவை வைத்து இந்த படத்தை இயக்கினார். ஒரு பேட்டியில் கார்த்தி இதுக்குறித்து கூறும்போது சர்பட்டா பரம்பரை எனக்கு மிகவும் பிடித்த கதை. ஆனால் என்னால் நடிக்க முடியாமல் போய்விட்டது என வருத்தப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: தனது நண்பரின் உயிரை காப்பாற்ற கொள்கையையே தூக்கி எறிந்த கலைவாணர்… ஏன் அப்படி செய்தார் தெரியுமா?

google news
Continue Reading

More in Cinema History

To Top