கவுண்டமணி கோபப்பட்டு கத்திட்டாரு!.. நாட்டாமை பட ஷூட்டிங்கில் நடந்த சம்பவம்!.. பகிரும் ரவிக்குமார்…

Published on: May 17, 2024
goundamani
---Advertisement---

80,90களில் தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருந்தவர் கவுண்டமணி. படத்தின் வெற்றிக்கு எப்படி இளையராஜா தேவைப்பட்டாரோ அப்படி கவுண்டமணி தேவையும் பட்டார். நடிகர் செந்திலை தன்னுடன் சேர்த்துகொண்டு கவுண்டமணி அடித்த லூட்டிகள் இப்போதும் 70 மற்றும் 80 கிட்ஸ்களின் ஃபேவரை காமெடி காட்சிகளாக இருக்கிறது.

ரஜினி, கமலை தவிர பிரபு, சத்தியராஜ், கார்த்திக், சரத்குமார், ராமராஜன் போன்ற நடிகர்களின் வெற்றிகளுக்கு கவுண்டமணி தேவைப்பட்டார். அதனால், ஒரே நாளில் ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் கூட நடித்தார் கவுண்டமணி. ஒரு கட்டத்தில் ஒரு நாளைக்கு இத்தனை லட்சம் என சம்பளம் வாங்கினார் கவுண்டமணி.

goundamani

மேலும், கதாநாயகனோடு இணைந்து படம் முழுக்கு வரும் இரண்டாவது ஹீரோ போலவும் கவுண்டமணி மாறினார். ஒருகட்டத்தில் எனக்கும் ஹீரோ போல ஜோடி வேண்டும். சண்டை வேண்டும் என்றெல்லாம் கேட்க துவங்கினார். அவருக்கு பின்னால் பல காமெடி நடிகர்கள் வந்துவிட்டாலும் இப்போது பலருக்கும் பிடித்தமான நடிகராக கவுண்டமணி இருக்கிறார்.

கவுண்டமணியின் அல்டிமேட் காமெடி இருந்த படங்களில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய நாட்டாமை படமும் ஒன்று. இந்த படத்தில் கவுண்டமணி நடித்தது பற்றி ஊடகம் ஒன்றில் பேசிய அவர் ‘அப்போது கவுண்டமணி தின சம்பளம் வாங்கி வந்தார். வெறும் 3 நாட்கள்தான் அவரிடம் கால்ஷீட் கேட்டேன். ஒரே நாளில் அவரை வைத்து 6 காட்சிகள் எடுப்பேன். எனக்கு கொஞ்சம் ரெஸ்ட்டு விடுப்பா என கெஞ்சுவார்.

goundamani

காமெடி காட்சிகள் மட்டுமின்றி படத்தின் முக்கியமான காட்சிகளில் கூட அவரை நடிக்க வைத்தேன். படம் பார்ப்பவர்களுக்கு படம் முழுக்க அவர் வருவது போலவே இருக்கும். ஒருகட்டத்தில் கடுப்பான கவுண்டமணி ‘ஏம்பா 3 நாள் கால்ஷீட் வாங்கி எல்லா சீன்லயும் என்ன நடிக்க வைக்குற.. படத்துல அம்மா, பையன்னு டபுள் ஆக்சன் வேற. இனிமே உனக்கு தின சம்பளம்லாம் கிடையாது. படத்துக்கு இவ்ளோன்னு சம்பளம் வாங்கி கொடுத்திடு’ என சொன்னார். அந்த அளவுக்கு அவரை அந்த படத்தில் பயன்படுத்தினேன்’ என கே.எஸ்.ரவிக்குமார் சொல்லி இருந்தார்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.