Connect with us
rajini

Cinema News

ரஜினி, கமலை வைத்து ஹிட் கொடுத்த இயக்குனருக்கு இப்படி ஒரு நிலைமையா? வளர்த்துவிட்டவருக்கு காட்டும் நன்றிக்கடனா இது?

தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வந்தவர் கே.எஸ்.ரவிக்குமார். வணிக ரீதியாக பல வெற்றிப்படங்கள் இவருடைய இயக்கத்தில் வெளிவந்தவைதான். இவர் இயக்கிய படங்களில் சில காட்சிகளில் நடிக்கும் வழக்கமும் உடையவர் ரவிக்குமார்.

ஏதாவது ஒரு சின்ன கேரக்டரில் தோன்றி மறக்கமுடியாத கதாபாத்திரமாக அது அமைந்து விடும். இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்தான் கே.எஸ்.ரவிக்குமார். இவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்தான் சேரன்.

இதையும் படிங்க : 150 நாள்களுக்கு மேல் ஓடிய விஜயகாந்த் படம்! மொத்தமாக தடைசெய்த தணிக்கை குழு – எப்படி ரிலீஸ் ஆச்சு தெரியுமா?

சரத்குமார், பிரபு, ரஜினி,  கமல் போன்றவர்களுக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தப் படங்கள் பெரும்பாலும் ரவிக்குமார் இயக்கத்திலேயே வெளிவந்தவை. சேரன் பாண்டியன்,நாட்டாமை , பாட்டாளி, சமுத்திரம்  போன்ற படங்கள் சரத்குமார் கெரியரிலேயே நல்ல வரவேற்பை பெற்ற படமாக அமைந்தது.

அதே போல் ரஜினிக்காக முத்து, படையப்பா போன்ற படங்களும் கமலுக்காக அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம், தெனாலி, தசாவதாராம், மன்மதன் அம்பி போன்ற படங்களும் அஜித்துக்காக வரலாறு ஆகிய வெற்றிப்படங்களை கொடுத்தார் ரவிக்குமார்.

இந்த நிலையில் மீண்டும் ரஜினி, கமலை வைத்து படங்களை இயக்க ரவிக்குமாருக்கு விருப்பம் இருக்கவே இன்று அவர்களின் வளர்ச்சி மாபெரும் வளர்ச்சியாக இருப்பதால் அவர்கள் கிட்டவே நெருங்க முடியாத அளவு நிலைமை மாறிவிட்டது. அதுமட்டுமில்லாமல் லிங்கா படத்திற்கு பிறகு ரஜினியுடன் மீண்டும் ஒரு படத்தில் இணைய வேண்டும் என கூறியிருந்தார் ரவிக்குமார்.

இதையும் படிங்க : அந்த வயசுலயே நான் எல்லாத்தையும் பண்ணேன்!.. பகீர் தகவலை சொல்லி அதிரவைத்த டிடி…

ஆனால் பெரிய பெரிய நடிகர்கள் இளம் தலைமுறை இயக்குனர்களை நோக்கி நகர்வதால் ரவிக்குமார் போன்ற பெரிய மூத்த இயக்குனர்களின் நிலைமை கேள்விக் குறியாக இருக்கிறது. இந்த நிலையில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமாரை வைத்து ஒரு புதிய படத்தை இயக்க போகிறாராம் ரவிக்குமார். தமிழ், கன்னடம் போன்ற இருமொழிகளில் அந்தப் படம் தயாராக் இருப்பதாக தெரிகிறது.

google news
Continue Reading

More in Cinema News

To Top