More

தாமரை மலத்தில் தான் மலரும்… கொந்தளித்த சித்தார்த்!

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 2003ம் ஆண்டு வெளியான திரைப்படம் பாய்ஸ் இதில் ஹீரோவாக நடித்து திரைத்துறையில் அறிமுமானவர் நடிகர் சித்ரார்த். அதையடுத்து ஆய்த எழுத்து, காதலில் சொதப்புவது எப்படி, தீயா வேலை செய்யணும் குமாரு, ஜிகர்தண்டா , காவியத் தலைவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார். 

Advertising
Advertising

நடிப்பதோடு மட்டும் நிறுத்தாமல் சமூகம் சார்ந்த பிரச்னைகளில் தலையிட்டு தனது கருத்துக்களை ஆழமாக பதிவு செய்து அரசியல்வாதிகளிடையே மறைமுகமாக  மோதுவார். இதனால் இவர் சர்ச்சைக்குரிய கதாநாயகன் எனவும் பெயர் பெற்றார். 

அது போன்று நடிகை சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில், பொய் சொன்னால் முதல்வராக இருந்தாலும் கன்னத்தில் அடிப்பேன் என பதிவு ஒன்றை இட்டிருந்தார். அதனை தற்போது நினைவுபடுத்திய ட்விட்டர்வாசி ஒருவர், முதல் சட்டமன்ற கூட்டத்திலே நீட் தேர்வை ரத்து செய்வோம் என கூறிவிட்டு நேற்று தேர்வு நடந்தது. இப்போ பொய் சொன்ன முதல்வரை என்ன செய்தீங்க? நீட் ரத்து எங்கடா?  என கேள்வி எழுப்பியிருந்தார். 

இதை பார்த்து  கோபம் தலைக்கேறிய சித்தார்த், மூதேவி கோபமோ, சந்தேகமோ வந்தால் நீ போயி கேள்வி கேளு இல்லனா உன் அப்பன போயி கேட்க சொல்லு என் வேலையை தாண்டா நான் பார்த்துகிட்டு இருக்கேன். ட்விட்டரை டாய்லெட் ஆக்கி வச்சிருக்கீங்க வேற எங்க மலரும் சாக்கடையில் தான் மலரும்… எழவு என கடும் கோபத்தோடு ரிப்ளை செய்தார். 

Published by
adminram

Recent Posts