">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
கீழ விழுந்து மண்டை ஒடஞ்சுடுச்சா…?ஆண்ட்ரியாவை ஆளாளுக்கு கலாய்க்குறாங்க!
கிண்டலுக்குள்ளாகும் நடிகை ஆண்ட்ரியா வெளியிட்ட புகைப்படம்
நடிகை ஆண்ட்ரியா பாடகியாக இருந்தாலும் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், தரமணி உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். திறமையும் அழகும் சரிபாதியாக கலந்த ஆண்ட்ரியா தொடர்ந்து முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார்.
இவரது நடிப்பில் வெளிவந்த வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களோடேயே நல்ல வரவேற்பை பெற்றதுடன் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டார். இதற்கிடையில் அவ்வப்போது ஆல்பம் சாங் , மேடை கச்சேரி உள்ளிட்ட இடங்களில் பாடல் பாடி அசத்தி வருகிறார். கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருந்து வரும் நடிகை ஆன்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்ப்போது 5 வது மாடியில் இருந்து கீழே விழுந்தது போல் தரையில் படுத்துக்கிடக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு கிண்டலுக்கு ஆளாகியுள்ளார். ஆனால், இந்த புகைப்படம் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள புத்தம் புது காலை படத்தின் காட்சி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் இன்று அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகியுள்ளது.