More

இரண்டு பந்தில் நான்கு சிக்ஸர்…. தலைகீழாக மாற்றிய ஆர்ச்சர்!

நேற்றைய போட்டியில் சிஎஸ்கே அணியின் தோல்விக்குக் காரணமாக அமைந்தது ஜோப்ரா ஆர்ச்சரின் கடைசி ஓவர் வெறித்தன பேட்டிங்.

Advertising
Advertising

நேற்று சி எஸ் கே அணிக்கும் ராஜஸ்தான் அணிக்கும் இடையிலான போட்டியில் ராஜஸ்தான் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு மிக முக்கியக் காரணமாக அமைந்தது ஜோப்ரா ஆர்ச்சரின் கடைசி ஓவர் வெறித்தன பேட்டிங்.

லுங்கி இங்கிடி வீசிய கடைசி ஓவரில் முதல் 2 பந்துகளிலேயே நான்கு சிக்ஸர்களைப் பறக்கவிட்டார் ஜோப்ரா ஆர்ச்சர்.இரண்டாவது பந்தை நோபாலாக வீசிய இங்கிடி அதில் சிக்ஸ் அடித்தார் ஆர்ச்சர். அதன் பிறகு அடுத்த பந்தையும் நோபாலாக வீசிய இங்கிடி அதிலும் சிக்ஸ் அடித்தார் ஆர்ச்சர். அடுத்த பந்தும் ப்ரீஹிட்டாக அமைய அதிலும் சிக்ஸ் அடித்தார் ஆர்ச்சர். இப்படியாக முதல் இரண்டு பந்துகளிலேயே 27 ரன்கள் கிடைத்தன. இந்த ஓவர்தான் வெற்றியை சிஎஸ்கேவிடம் இருந்து பறித்தது.

Published by
adminram

Recent Posts