மாப்பிள்ளை படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் ஹன்சிகா. தொடர்ந்து விஜய்யுடன் வேலாயுதம், புலி, சிவகார்த்திகேயனுடன் மான் கராத்தே, சிம்புவுடன் வாலு என முன்னணி நடிகையாக வலம் வந்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு கன்னடம் போன்ற மொழிப் படங்களிலும் நடித்து வந்தார்.
கடைசியாக குலேபகவலி படத்திற்கு பின் அவரது படங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலையில் தனது தோற்றத்தை மிகவும் மெலிய வைத்து அவ்வப்போது வித விதமான புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.
ஹன்சிகா நடிப்பதோடு மட்டுமல்லாமல் சமூகத்திற்ககு நிறைய நல்ல விஷயங்களை தொடர்ந்து செய்து வருகிறார். ஆம், ஆதரவற்ற 10க்கும் மேற்பட்ட குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார் என்பது நம் அனைவருக்கு தெரிந்த ஒன்றே இந்நிலையில் தற்போது தெரு நாய்களுக்கு பெடிகிரி பெட் ஃபுட் கொடுத்து பசியாற்றியுள்ளார். இந்த வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட அவரது நல்ல குணத்தை அனைவரும் பாராட்டியுள்ளனர்.
சினிவாவில் சில…
சினிமா விழாவில்…
வெங்கட் பிரபு…
பிரபாஸ் நடிப்பில்…
தமிழ் சினிமாவில்…