பாலிவுட் சினிமாவின் நட்சத்திர நாயகிகளில் ஒருவரான நடிகை கங்கனா ரனாவத் ஆரம்பத்தில் இருந்தே பாலிவுட் சினிமா துறையில் நடக்கும் பல்வேறு அவலங்களை வெளி உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டி வருகிறார்.
குறிப்பாக சுஷாந்த் சிங் மரணத்திற்கு பிறகு அவர் ஏராளமான திரைபிரபலங்களின் உண்மை முகத்தை கிழித்து வெட்ட வெளிச்சமாக்கி வருகிறார். அந்தவகையில் தற்ப்போது பிரபல இயக்குனர் அனுராக் கஷ்யப் தன்னை வீட்டிற்கு வரவைத்து ஒரு தனி அறைக்கு கொண்டு சென்று வலுக்கட்டாயமாக உறவுக்கொள்ள வற்புறுத்தினார் என கூறியுள்ளார்.
பின்னர் அவரிடம் கெஞ்சி அவரின் ஆசைக்கு இணங்க மறுத்துவிட்டு அங்கிருந்து ஓடிவந்ததாக தெரிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இயக்குனர் அனுராக் கஷ்யப் நயன்தாராவின் இமைக்க நொடிகள் படத்தில் அவருக்கு வில்லனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சினிவாவில் சில…
சினிமா விழாவில்…
வெங்கட் பிரபு…
பிரபாஸ் நடிப்பில்…
தமிழ் சினிமாவில்…