More

பெண் பத்திரிக்கையாளரை அவதூறாக பேசிய கிஷோர் கே ஸ்வாமி –கைதுக்குப் பின்னர் ஜாமீன்!

சமூகவலைதளங்களில் பெண் ஊடகவியலாளர் ஒருவரைப் பற்றி தவறாகப் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு பின் சொந்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

Advertising
Advertising

ஊடகங்களில் நடக்கும் விவாதங்களில் கலந்து கொள்பவர் கிஷோர் கே ஸ்வாமி. இவர் திமுக மற்றும் திராவிட இயக்கங்களுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டனர். அதனால் அந்த இயக்கம் மற்றும்  கட்சியைக் கடுமையாக தாக்கிப் பேசுவார். இந்நிலையில் பெண் ஊடகவியலாளர் ஒருவரை அவமரிதை செய்து பதிவு ஒன்றை பகிர்ந்ததற்காக அவர் மேல் புகார் செய்தார் அந்த பத்திரிக்கையாளர்.

இதையடுத்து கிஷோர் கே ஸ்வாமி தலைமறைவானார். ஆனால் அவரைப் போலிஸார் சென்னையில் வைத்து கைது செய்தனர். பின்னர் அவரை ஒரே ஒரு மணிநேரத்தில் ஜாமீனில் விடுதலை செய்தனர். இந்த சம்பவம் சமூகவலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published by
adminram

Recent Posts