ஈஸ்வரன் திரைப்படத்திற்கு பின் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் மாநாடு. இப்படத்தை சுரேஷ் காமாட்சி அதிக பட்ஜெட்டில் உருவாக்கி வருகிறார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது.
இந்நிலையில், அப்படப்பிடிப்பு தொடர்பான புகைப்படங்கள சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வெளியாகி வருகிறது. சமீபத்தில் குக் வித் கோமாளி புகழ் சிம்புவுடன் பேசிக்கொண்டிருக்கும் புகைப்படம் வெளியானது. எனவே, அவரும் இப்படத்தில் நடிப்பது ரசிகர்களுக்கு தெரியவந்தது.
தற்போது அப்படத்தில் எஸ்.ஜே. சூர்யாவுடன் சிம்பு பேசிக்கொண்டிருக்கும் புகைப்படமும், மண்ணில் சிம்பு படுத்திருப்பது போலவும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படங்களை வெங்கட்பிரபுவே தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து ‘இதுதான் நடிகர்களின் வாழ்க்கை.. சிம்பு எளிமை’ என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை சிம்பு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
சினிவாவில் சில…
சினிமா விழாவில்…
வெங்கட் பிரபு…
பிரபாஸ் நடிப்பில்…
தமிழ் சினிமாவில்…