2 திருமணங்கள் செய்து கணவர்களை பிரிந்த வனிதா விஜயகுமார் சில மாதங்களுக்கு முன்பு மூன்றாவதாக பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்டது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்.அதன்பின் பீட்டர் பாலின் குடிப்பழக்கத்தால் அவரை விட்டு சமீபத்தில் பிரிந்தார்.
வனிதா தொடர்பாக எல்லா விஷயங்களும் செய்தி ஆனதால், அழுது கொண்டே பீட்டர் பாலை பிரிந்தது குறித்து விளக்கம் அளித்தார். அதன்பின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க துவங்கிவிட்டார்.
இந்நிலையில், தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ யாருக்கும் இந்த வருடம் தீபாவளி வாழ்த்து கூறவில்லை. அதற்காக மன்னித்து விடுங்கள். பிரேக் அப் நடந்த பின் வரும் பண்டிகைகள் வலி நிறைந்தது. எனவே, மன அழுத்தத்தில் இருந்தேன். நீங்கள் அனைவரும் மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாடியிருப்பீர்கள் என நம்புகிறேன்’ என பதிவிட்டிருந்தார்.
இதைக்கண்ட நெட்டிசன் ஒருவர் ‘அய்யோ தலை தீபாவளி போச்சே’ என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
0களில் தமிழ்…
தமிழ் சினிமாவில்…
இன்று சமூகவலைத்தளங்களைத்…
ஆந்திராவை சேர்ந்தவர்…
Actor Ajith:…