பவன் கல்யாண் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். எனவே,தெலுங்கு திரையுலகை சேர்ந்த நடிகர், நடிகைகள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதோடு, அவரின் ரசிகர்களும் பேனர் வைப்பது, கட் அவுட் வைப்பது என பல வகைகளில் அவரின் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், சித்தூர் மாவட்டத்தில் உள்ள சாந்திபுரம் பகுதியில் பவன்கல்யாணுக்கு 25 அடி உயர பேனர் வைக்கும் முயற்சியில் அவரின் ரசிகர்கள் சிலர் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி 3 ரசிகர்கள் மரணமடைந்தனர். அதேபோல், மேலும் 4 பேர் மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தனர். அவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் இன்னும் அபாய கட்டத்தை தாண்டவில்லை என்பதால் பலி எண்ணிகை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து பவன் கல்யாணின் அண்னன் சிரஞ்சீவியின் மகனும், நடிகருமான ராம் சரண் மரணமடைந்த குடும்பத்தினருக்கு தலா ரூ.2.5 லட்சம் நிதியுதவி செய்வதாக அறிவித்துள்ளார்.
சினிவாவில் சில…
சினிமா விழாவில்…
வெங்கட் பிரபு…
பிரபாஸ் நடிப்பில்…
தமிழ் சினிமாவில்…