More

சைக்கோ 2 வரும்: உதயநிதி அறிவிப்பு –அதுலயாவது சிசிடிவி இருக்குமா ?

சைக்கோ படத்தின் இரண்டாம் பாகம் வரும் என நடிகர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதிராவ் ஹையாத்ரி, நித்யா மேனன் மற்றும் ராஜ்குமார் ஆகியோர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான சைக்கோ படத்தின் வெற்றி விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

விழாவில் பேசிய நடிகர் சிங்கம்புலி சைக்கோ படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கவேண்டுமென தனது ஆசையை வெளிப்படுத்தினார். அதையடுத்து பேசிய படத்தின் கதாநாயகன் உதயநிதி ஸ்டாலின் ‘சைக்கோ இறந்ததைப் போல காமிக்கவில்லை. அவன் விழுந்தது போலதான் காமித்தார் இயக்குனர். இன்னும்

கமலாதாஸ் மற்றும் தயாரிப்பாளர் உயிரோடு இருக்கிறார்கள் அவர்களுக்காக கட்டாயம் சைக்கோ 2 எடுப்போம்’ என்று நகைச்சுவையாக கூறியுள்ளார்.

அந்த படத்திலாவது சிசிடிவி கேமரா இருக்குமா என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Published by
adminram

Recent Posts