நடிகர் ரஜினிகாந்த் தற்போது சிவா இயக்கத்தில் அண்ணாத்தே படத்தில் நடித்து வருகிறார். ஆனால், ரஜினியின் உடல்நலக்குறைவால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், விரைவில் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.இப்படத்திற்கு பின் யார் இயக்கத்தில் ரஜினி நடிக்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு திரையுலகில் எழுந்துள்ளது.
இந்நிலையில், அண்ணாத்தே படத்திற்கு பின் மீண்டும் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ரஜினி ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது. கார்த்திக் சுப்பாராஜ் விக்ரமை வைத்து ஒரு புதிய படத்தை இயக்குவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின், அடுத்த வருடம் பிப்ரவரி மாதத்தில் ரஜினி நடிக்கும் படத்தை அவர் இயக்கவுள்ளார் எனக் கூறப்படுகிறது. மேலும், 2022 தீபாவளிக்கு ரஜினி படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக் கூறப்படுகிறது. ரஜினியை வைத்து ‘பேட்ட’ படத்தை கார்த்திக் சுப்பாராஜ் ஏற்கனவே இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அரண்மனை 4…
தொடர்ச்சியாக திரைப்படங்களில்…
Vijay vs…
ஷங்கரின் இயக்கத்தில்…
Kamalhassan: தமிழ்…