Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

சாப்பாட்டில் தூக்கமாத்திரை…. தம்பதிகளை தூங்கவைத்து ! பெண்கள் கைவரிசை !

சென்னையில் பல் மருத்துவரின் வீட்டில் வேலைப்பார்த்து வந்த வேலைக்கார பெண்கள் இருவர் அந்த வீட்டில் இருந்து தங்கக் கட்டிகளை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.

0b730fa78af154fbb0a7dd678a051610

சென்னையில் பல் மருத்துவரின் வீட்டில் வேலைப்பார்த்து வந்த வேலைக்கார பெண்கள் இருவர் அந்த வீட்டில் இருந்து தங்கக் கட்டிகளை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.

சென்னை எழும்பூர் காஜாமேஜர் சாலையில் வீட்டில் வசித்து வருபவர் பல் மருத்துவர் கோகுல்தாஸ் மற்றும் அவரது மனைவி. இவர்களது மகன் கல்யாண்குமார் தனது குடும்பத்தினருடன் தனியாக வசித்து வந்துள்ளார். இதனால் வயதான தம்பதிகளுக்கு உதவி செய்ய வேலையாளாக லோகநாயகி மற்றும் ஷாலினி ஆகிய இரு பெண்களை வேலைக்கு வைத்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தந்தையின் வீட்டில் தான் வைத்திருந்த 6 லட்சரூபாய் பணம் காணாமல் போயிருப்பதாக கல்யாண்குமார் தனது தந்தையிடம் சொல்லியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கோகுல்தாஸ், பகலில் நாங்கள் இருவரும் தூங்கி விடுகிறோம். தங்களுக்கு எதுவும் தெரியாது என சொல்லியுள்ளார். அதனால் அதிர்ச்சியடைந்த கல்யாண், வீட்டில் இருந்த நகைகளை சரிபார்த்துள்ளார். அப்போதுதான் அவருக்கு முழு விவரமும் தெரியவந்துள்ளது. கிட்டத்தட்ட 2 கிலோ அளவுக்கு நகைகள் மற்றும் தங்கக் கட்டிகள் காணாமல் போயுள்ளன என்று.

இதையடுத்து போலீஸில் புகாரளிக்க அவர்கள் ஷாலினி மற்றும் லோகநாயகி ஆகியோரை விசாரித்துள்ளனர். அப்போது அவர்கள் வயதான தம்பதிகளுக்கு மதிய உணவில் தூக்கமாத்திரையைக் கலந்துகொடுத்து தூங்கவைத்து கொஞ்சம் கொஞ்சமாக நகைகளை திருடியுள்ளனர். அப்படி செய்தால் அவர்களால் கண்டுபிடிக்க முடியாது என எண்ணி. ஆனால் பணத்தைத் திருடியதால் அவர்களுக்கு சந்தேகம் வந்து மாட்டிக் கொண்டுள்ளனர்.

திருடிய நகை மற்றும் பணத்தை வைத்து லோகநாயகி தனது மகளுக்கு ஆடம்பரமாக திருமணம் செய்து வைத்ததும், ஷாலினி தனது மகளுக்கு ஆடம்பரமாக மஞ்சள் நீராட்டு விழா நடத்தியதும் கண்டுபிடிக்கபப்ட்டுள்ளது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top