தமிழ் சினிமாவில் அதிக பட்ஜெட்டில் பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் ஷங்கர். ஜென்டில்மேன், இந்தியன், ஜீன்ஸ், காதலன், முதல்வன், அந்நியன், சிவாஜி, ஐ, எந்திரன் என அவர் இயக்கிய திரைப்படங்கள் பெரும் வரவேற்பை பெற்றது. சமூக கருத்தை கிராபிக்ஸ் கலந்து பேண்டஸி திரைப்படமாக கொடுப்பதில் அவருக்கு நிகர் அவரே..
ஆனால், இந்தியன் 2 திரைப்படத்தை எப்போது கையில் எடுத்தாரோ அப்போது அவருக்கு பிடித்ததது சனி.. படம் துவங்கி சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடந்தது. அதன்பின், கமல்ஹாசன் – லைகா இடையே பஞ்சாயத்து, படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு 3 பேர் மரணம், கொரோனா பரவலால் படப்பிடிப்புக்கு தடை, லைக்காவுக்கும், ஷங்கருக்கும் இடையே பஞ்சாயத்து என படம் துவங்கி இரண்டரை வருடங்களாக படம் முடங்கிக் கிடக்கிறது.
படத்தை துவங்குவது குறித்து எதுவும் கூறாமல் அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா அமைதியாக இருந்ததால், பொறுத்து பொறுத்து பார்த்த ஷங்கர் ‘இந்தியன் 2’- வை விட்டுவிட்டு தெலுங்கில் ராம்சரணை வைத்து ஒரு புதிய படமும், அதன்பின் பாலிவுட்டில் அந்நியன் 2 – படத்தை ரீமேக் செய்வதாகவும் அறிவித்தார். இதைத்தொடர்ந்து இந்தியன் 2 -வை முடிக்காமல் வேறு படங்களை இயக்க செல்ல ஷங்கருக்கு தடை விதிக்க வேண்டும் என லைகா நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால், ஷங்கருக்கு தடை விதிக்க முடியாது என தீர்ப்பு வெளியாகிவிட்டதால், தெலுங்கில் ராம்சரணை இயக்கும் பணியில் ஷங்கர் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், இப்படத்திற்கு பிரபல தெலுங்கு பட இசையமைப்பாளர் தமன் இசையமைக்கவுள்ளது தெரியவந்துள்ளது. இவர் பாய்ஸ் படத்தில் நான்கு இளைஞர்களில் ஒருவராக, நடிகராக ஷங்கரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்.
அதன்பின் தெலுங்கு சினிமா பக்கம் சென்று இசையமைப்பாளராகி விட்டார். தற்போது அங்கு முன்னணி நடிகர்கள் நடிக்கும் திரைப்படங்களுக்கு அவர் இசையமைத்து வருகிறார். விரைவில் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கமாக ஷங்கர் திரைப்படங்களுக்கு ஏ.ஆர்.ரகுமான்தான் இசையமைப்பார். இந்த முறை தெலுங்கு படம் என்பதால் தமன் இசையமைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
சினிவாவில் சில…
சினிமா விழாவில்…
வெங்கட் பிரபு…
பிரபாஸ் நடிப்பில்…
தமிழ் சினிமாவில்…