">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
பணம் வாங்கியும் சரியான சிகிச்சை அளிக்கவில்லை.. வடிவேல் பாலாஜி நண்பர் புகார்….
பணம் வாங்கியும் சரியான சிகிச்சை அளிக்கவில்லை.. வடிவேல் பாலாஜி நண்பர் புகார்….
விஜய் தொலைக்காட்சியின் பல நகைச்சுவை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பிரபலமானவர் வடிவேல் பாலாஜி. இன்று பிரபலமாக இருக்கும் சிவகார்த்திகேயன் மற்றும் ரோபோ சங்கர் ஆகியவர்களுக்கு மிகவும் நெருக்கமான நண்பர். 45 வயதாகும் அவர் கடந்த 15 நாட்களுக்கு முன்னர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை செய்ய போதிய வசதி இல்லாத நிலையில் அரசு மருத்துவமனைக்கு அவரை குடும்பத்தினர் கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கேயும் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து அவருக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் சேத்துப்பட்டில் உள்ள அவரது வீட்டுக்கு நேரில் சென்ற நடிகர் விஜய் சேதுபதி வடிவேலு பாலாஜியின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
இந்நிலையில், தனியார் மருத்துவமனையில் அவருக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை என அவருடன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்த ஆதவன் தெரிவித்துள்ளார். எங்களால் முடிந்த வர பணத்தை தயார் செய்து கொடுத்தோம். ஆனால், கொரோனா நோயாளிகளுக்கு மட்டுமே இன்சூரன்ஸ் அனுமதிப்போம். மற்ற நோயாளிகளுக்குசெய்ய மாட்டோம் எனக்கூறினர். கொரோனா சிகிச்சை மட்டுமே செய்து வந்ததால் நல்ல மருத்துவமனையில் அவரை சேர்க்க முடியவில்லை.
அவரது உடலில் இருந்த சில பிரச்சனைகளுக்கு சிகிச்சையும் அளிக்காமல், எங்களிடம் சொல்லமாலேயே அவரை டிஸ்சார்ஜ் செய்து விட்டனர். மீதி பணத்தை கட்டவில்லை என்பதால் அனுப்பி விட்டனர். அரசு மருத்துவர்கள் கூறிய பின்புதான் அது எங்களுக்கு தெரியவந்தது. சரியான சிகிச்சை அளித்திருந்தால் அவர் பிழைத்திருப்பார். இந்த சோகத்திலிருந்து எங்களால் மீள முடியவில்லை’ என ஆதவன் தனது ஆதங்கத்தை பகிர்ந்துள்ளார்.