More

டிக்டாக்கில் வீடியோ இளைஞர்… நண்பர் என்றும் பாராமல் அடித்துக் கொலை – கடலூரில் நடந்த கொடூரம் !

கடலூரில் நண்பர்களுக்குள் நடந்த சண்டையை வேடிக்கையாக டிக்டாக்கில் பகிர்ந்த ஜோசப் என்ற விஜய் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

Advertising
Advertising

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெய்வின் ஜோசப் என்ற இளைஞர். இவர் கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு நண்பர்களோடு வெட்டியாக ஊர்சுற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவரைக் கடந்த சில நாட்களாக காணவில்லை என அவரது தாய் அளித்த புகாரின் படி, போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில் அவரது சில நண்பர்களை விசாரித்தும் செல்போனை ட்ராக் செய்தும் போலிஸார் நடத்திய விசாரணையில் ஜோசப் கொலை செய்து புதைத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜோசப்பின் நண்பர்கள் கூட்டத்தில் ஒரு பெண்ணிடம் பேசுவது சம்மந்தமாக இரு தரப்பினருக்கு  இடையே பிரச்சனை எழுந்துள்ளது.

நண்பர்கள் இதற்காக அடித்துக் கொள்வதை ஜோசப் டிக்டாக்கில் வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளார். இதனால் கோபமான நண்பர்கள் அதை நீக்க சொல்லியுள்ளனர். ஆனால் அதற்கு ஜோசப் மறுக்கவே அவரை தனியாக அழைத்துச் சென்று  குடிக்கவைத்து கொலை செய்துள்ளனர். பின்னர் அவரைக் குழித்தோண்டி புதைத்துள்ளனர்.

கொலையாளிகளைக் கைது செய்த போலீஸார் அவர்கள் அடையாளம் காட்டிய ஜோசப்பின் உடலை தோண்டி எடுத்து ஆய்வு செய்தனர்.

Published by
adminram

Recent Posts