">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
நோ சொன்ன விஜய்… சிம்புவிடம் சென்ற சுதா கொங்கரா…பக்கா திரில்லர்…
இறுதிச்சுற்று மூலம் இயக்குனராக வெற்றி பெற்றவர் சுதா கொங்கரா. மணிரத்தினத்தின் உதவியாளரான இவர் சூர்யாவை வைத்து ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார்.
நடிகர் விஜயின் அடுத்த திரைப்படத்தை இவர்தான் இயக்குகிறார் என செய்திகள் பரவியது. ஆனால், அந்த கதை விஜய்க்கு பிடிக்காததால் அவர் நடிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை எனத்தெரிகிறது. எனவே, சிம்புவை வைத்து படம் எடுக்க சுதா கொங்கரா முடிவெடுத்துவிட்டார். அவர் சிம்புவிற்கு ஏற்கனவே நெருக்கமானவர் என்பதும், மணிரத்னம் இயக்கிய செக்கச் சிவந்த வானம் திரைப்படத்தில் சிம்புவை நடிக்க வைக்க மணிரத்தினத்திடம் சிபாரிசு செய்தவரும் அவர்தான் என பலருக்கும் தெரியாது.
சிம்புவை வைத்து அவர் இயக்கவுள்ள திரைப்படம் திரில்லர் வகையை சேர்ந்தது எனக்கூறப்படுகிறது.