More
Categories: Cinema News latest news

லியோ வசூல் கணக்கு எல்லாமே பொய்!.. சொன்னா மிரட்டுறாங்க!.. அடுத்த குண்டை வீசிய திருப்பூர் சுப்ரமணியன்…

Leo Movie: லியோ திரைப்படத்தினை சுற்றி தொடர்ந்து விமர்சன ரீதியாக பல குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருக்கும் நிலையில் தற்போது ஒரு புதிய தகவலை வெளியிட்டு இருக்கிறார் திருப்பூர் சுப்ரமணியன். அவர் அளித்திருக்கும் விஷயங்கள் ரசிகர்களுக்குமே அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது.

லோகேஷின் கேரியரிலேயே அதிகம் விமர்சிக்கப்பட்ட படம் லியோவாக தான் இருக்க வேண்டும். ரிலீஸான முதல் நாளில் இருந்து படம் நன்றாக இல்லை என ஒரு கூட்டம் வைரலாக்கி கொண்டே இருந்தது. சில நெகட்டிவ் ஹேஸ்டேக்குகள் வெளியாகியது.

Advertising
Advertising

இதையும் படிங்க: நயனுக்கு பாலிவுட்டில் குவியும் வாய்ப்புகள்… அடுத்த பட சம்பளம் இவ்வளவோ?

இதையடுத்து சமீபத்தில் தியேட்டர் உரிமையாளர் திருப்பூர் சுப்ரமணியன் ஜெயிலர் தான் எங்களுக்கு நல்ல வசூலை கொடுத்தது. லியோவால் பெரிய லாபம் என எதுவுமே இல்லை. எங்களை மிரட்டியே லியோ தொடர்ந்து ஓட்டி வருகின்றனர். விருப்பம் இல்லாமல் தான் செய்வதாக கூறி இருந்தார்.

இந்நிலையில் மீண்டும் அவர் அளித்த பேட்டியில் எனக்கு செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸின் லலித்குமார் கால் செய்தார். ஏன் இப்படி பேட்டி கொடுத்துக்கிட்டு இருக்கீங்க என சத்தம் போட்டார். 

அவரே 70, 80 சதவீத லாபத்தினை எடுத்து கொண்டால் நாங்களாம் என்ன பண்ணுவது.

லியோ வசூலில் உண்மை தொகை என ஒன்னுமே இல்லை. லலித் அவருக்கு தோன்றும் நம்பரை பொதுவெளியில் வெளியிட்டு வருகிறார். இதுமட்டுமல்லாமல் புக்கிங்கில் நிறைய தில்லாலங்கடியும் செய்தனர். அதாவது, வெளிநாட்டு தியேட்டர்களில் இவர்களே புக்கிங் செய்து கொண்டனர். இதனால் 5 கோடி வரை செலவு செய்தால் கூட கவலைப்படவில்லை. 

இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் நைட் பார்ட்டியில் என்ன நடந்தது.. பகீர் கிளப்பும் பத்திரிக்கையாளர்… ப்ரின்ஸ் நிலைமை படுமோசம்..!

லலித்துக்கு விஜயை வைத்து அடுத்த படத்தினை தயாரிக்க வேண்டும். அதற்காக இப்படி ஒரு விஷயத்தினை செய்கிறார். ஒரு படத்துக்கே இப்படியென்றால் தமிழ் சினிமா இவர் கைக்கெல்லாம் போனால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

Published by
Akhilan