வேற வழி தெரியல ஆத்தா!.. ரசிகர்கள் தலையில் பெரிய ஐஸ் வைத்த மகேஷ் பாபு!.. படம் எப்படி இருக்குமோ?

திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு, மீனாக்‌ஷி சவுத்ரி, ஸ்ரீலீலா, பிரகாஷ் ராஜ் மற்றும் ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள குண்டூர் காரம் வரும் ஜனவரி 12ம் தேதி சங்கராந்தியை முன்னிட்டு வெளியாகிறது.

டோலிவுட்டில் ஹனுமன் மற்றும் குண்டூர் காரம் படங்களுக்கு மத்தியில் தான் போட்டி நிலவி வருகிறது. தனுஷின் கேப்டன் மில்லர் படம் உள்ளிட்ட எந்தவொரு படத்துக்கும் டோலிவுட் பக்கமே இடம் கிடைக்காத அளவுக்கு ஏகப்பட்ட தியேட்டர்களை மகேஷ் பாபு படத்துக்காக தில் ராஜு ஆட்டையை போட்டு வைத்திருப்பதாக சர்ச்சை வெடித்தது.

இதையும் படிங்க: அமெரிக்காவில் அயலானுக்கு ஆப்பு அடித்த கேப்டன் மில்லர்!.. ஐமேக்ஸ் ரிலீஸ் வேற!.. பாக்ஸ் ஆபிஸ் வேட்டை!

இந்நிலையில், நேற்று நடைபெற்ற ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய மகேஷ் பாபு கடந்த 2022ம் ஆண்டு தனது தாய் மற்றும் தந்தையை இழந்த நிலையில், என்னுடைய தாய் மற்றும் தந்தை என எல்லாமே என்னுடைய ரசிகர்கள் தான் என பெரிய ஐஸாக வைத்திருக்கிறார்.

நடிகர் விஜய் லியோ வெற்றி விழாவில் பேசும் போது ரசிகர்களுக்கு என்னுடைய தோலை செருப்பா தச்சு போட்டாலும் பத்தாது என ஐஸ் வைத்திருந்தார். இந்நிலையில், அதே பாணியில் மகேஷ் பாபு பேசியதை நெட்டிசன்கள் சிம்பதி ஸ்டார் மகேஷ் பாபு என கலாய்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க: என்ன சிறுத்தையை கரடிக்குட்டியா மாத்திட்டாரே!.. கங்குவா வில்லன் சூர்யா பத்தி என்ன சொன்னாரு தெரியுமா?

இந்த படத்தில் இருந்து தான் நடிகை பூஜா ஹெக்டேவை நல்லாவே நடிக்கவில்லை என அதிரடியாக தூக்கியது பெரும் சர்ச்சை வெடித்தது. ஒளிப்பதிவாளரும் மாற்றப்பட்டார். இசையமைப்பாளர் தமனையும் மாத்திட்டாங்க என வதந்தி கிளம்பியதும் தமன் டென்ஷன் ஆகியிருந்தார். பெரிய போட்டி இல்லை என்றாலும் அதே அரைச்ச மசாலா படமாகவே குண்டூர் காரம் இருக்கும் என்பதால் எந்தளவுக்கு ஹிட் அடிக்கும் என்பது சந்தேகம் தான்.

 

Related Articles

Next Story