பெரிய ஹீரோ படம்! 4 நாள் நடிச்சேன்! பாத்தா என்னை தூக்கிட்டாங்க - மஹிமா சொன்ன படம் எதுனு தெரியுமா

Actress Mahima nambiar: தமிழ் சினிமாவில் கனவுக் கன்னியாக வரவேண்டிய நடிகை மஹிமா நம்பியார். சாட்டை படத்தின் மூலம் முதன் முதலில் தமிழில் அறிமுகமான நடிகை. அந்தப் படத்தில் அறிவழகி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இப்படி ஒரு காதலி கிடைக்க மாட்டாளா என்று ஏங்க வைத்தவர்தான் மஹிமா.

அதன் பிறகு இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தில் சுசீலா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ஆஃபிஸில் இப்படி ஒரு பெண் இருந்தால் நன்றாக இருக்குமே என்று யோசிக்க வைத்திருப்பார். இப்படி தான் நடிக்கும் படங்களின் மூலம் இளசுகளின் மனதில் ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்திய நடிகையாகவே மஹிமா வலம் வருபவர்.

இதையும் படிங்க: யோகிபாபுவுக்கு அடுத்த மண்டேலாவா குய்கோ?.. பிரபல விமர்சகர் என்ன சொல்றார் பாருங்க!..

மலையாளத்திலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் மஹிமா. சமீபத்தில் ரீலிஸான சந்திரமுகி 2 படத்தில் லாரன்ஸுக்கு ஜோடியாக நடித்திருந்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் மஹிமா இளைஞர்களின் மனதை கவர்ந்த நடிகையாக இருக்கிறார்.

ஆரம்பத்தில் தமிழ் பேசத் தெரியாதவராகத்தான் வந்தார். சாட்டை படத்தில் நடிக்கும் போது மஹிமா 12 ஆம் வகுப்புதான் படித்துக் கொண்டிருந்தாராம். அந்தப் படத்தில் அவருடன் நடித்தவர்களும் மஹிமாவின் வயதுடையவர்கள் என்பதால் அவர்கள் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் கற்றுக் கொண்டாராம்.

இதையும் படிங்க: உன்ன பாத்தாலே மனசு கெட்டு போகும்!. ஸ்லிம் பியூட்டியை காட்டி இழுக்கும் கீர்த்தி…

இப்போது தமிழை சரளமாகப் பேசக்கூடிய நடிகையாகவே மஹிமா மாறியிருக்கிறார். இந்த நிலையில் ஒரு தெலுங்கு படத்தில் அதுவும் ஒரு பெரிய ஹீரோ நடித்தப் படமாம். அந்தப் படத்தில் ஹீரோவுக்கு ஜோடியாக மஹிமா நடித்தாராம்.

நான்கு நாள்கள் அந்தப் படத்தில் நடித்தாராம். அதன் பிறகு கொஞ்சம் பிரேக் எடுக்க திடீரென மேனேஜர் மஹிமாவுக்கு போன் செய்து ஒரு பெரிய ஹீரோயின் உங்கள் கதாபாத்திரத்தில் நடிப்பதால் இந்தப் படத்தில் இருந்து உங்களை விலக்கி விட்டதாக மஹிமாவுக்கு கூறினாராம். இப்படி ஏகப்பட்ட கசப்பான சம்பவங்கள் நடந்திருப்பதாகவும் கூறினார்.

இதையும் படிங்க: ‘விருமாண்டி’ படத்துல சொல்ல நினைச்சது! சொல்லாம போனது இதுல இருக்குயா – கமல் பார்த்து சொன்ன படம் எதுனு தெரியுமா?

 

Related Articles

Next Story