Connect with us

Cinema News

திரிஷாவை மட்டுமில்லை விஜய் முன்னாடியே அந்த நடிகையையும் மன்சூர் அலி கான் தப்பா தான் பேசினாரு!..

சினிமாவில் பலாத்கார காட்சிகளில் நடிகைகள் வில்லன் நடிகர்களுடன் துணை நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் போது, அதை சினிமாவாகவே நினைத்து நடித்து வருகின்றனர். ஆனால், மன்சூர் அலி கான் உள்ளிட்ட சிலர் அதனை தப்பான எண்ணத்துடன் அணுகுவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

இனிமேல் வில்லன் நடிகர்களுடன் சேஸிங் சீனில் நடிக்கக் கூட நடிகைகள் நோ சொல்லி விடுவார்களே என்கிற அச்சம் எழுகிறது. ஆடை படத்தில் நடிகை அமலா பால் ஆடையின்றி நடித்தாலும், தன்னை ஆபாசமாக காட்டி விட மாட்டார்கள் என்றும் ஆபாசமாக அந்த டீம் பார்த்து விடாது என்கிற நம்பிக்கையில் அவர் தான் அப்படி நடித்திருந்தார்.

இதையும் படிங்க: திரிஷா விவகாரம்.. விஜய், அஜித் அமைதி காப்பது சரியா?.. மீசையே இல்லையா என புளூ சட்டை அசிங்கப்படுத்துறாரே!..

மன்சூர் அலி கான் சமீப காலமாகவே தனது வெளிப்படையான பேச்சு என மனதில் உள்ள வக்கிரத்தை கொட்டி வருகிறார் என்றும் அதனை கண்டிப்பாக கண்டித்தே தீர வேண்டும் என பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

சரக்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் மன்சூர் அலி கான் தன்னுடைய பட பிரஸ்மீட் என ஓவராக வாய் விட்டு பேசியதால் சிக்கலில் சிக்கிக் கொண்டார். ஆனால், இதே போலத்தான் நடிகர் விஜய், திரிஷா உள்ளிட்டோர் முன்னிலையில் அத்தனை ஆயிரம் பேர் கூடியிருந்த லியோ வெற்றி விழாவிலேயே திரிஷா குறித்தும் அதை விட மோச்மாக மடோனா செபாஸ்டியன் குறித்தும் மன்சூர் அலி கான் ஆபாசமாக பேசினார் என வலைப்பேச்சு பிஸ்மி சமீபத்திய வீடியோவில் குறிப்பிட்டு கண்டித்துள்ளார்.

இதையும் படிங்க: திரிஷாவுக்கு கிடைச்ச ஆதரவு இமானுக்கு இல்லையேப்பா!.. இளிச்சவாயானா ஈசியா அடிச்சுடலாமா?

மன்சூர் அலி கானுக்கு சினிமாவில் ரெட் கார்டு கொடுத்து ஒதுக்க வேண்டும் என்றும் முன்னணி நடிகர்கள் இந்த பிரச்சனைக்கு குரல் கொடுத்தால் தான் சினிமாவில் நடிகைகள் தயக்கமின்றி நடிப்பார்கள். அவர்களுக்கான பாதுகாப்பான சூழல்கள் உருவாக்கி தருவது நடிகர்களின் கடமை. பல நடிகைகள் தொடர்ந்து அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சனை பற்றி பேசும் போதே நடிகர்கள் ஊமை சாமியார்களாக இருந்து வரும் நிலையில், இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பார்களா என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது.

google news
Continue Reading

More in Cinema News

To Top