Connect with us
mansoor

Cinema News

ரசிகர்களுக்காக மன்சூர் அலிகான் செய்யப்போகும் காரியம்!.. அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே!…

தமிழ் சினிமாவில் தன்னுடைய வில்லன் கதாபாத்திரத்தால் அனைவரையும் மிரள வைத்தவர் நடிகர் மன்சூர் அலிகான். கேப்டன் பிரபாகரன் படத்தில் அறிமுகமானார். அப்படத்தில் கொடூரமான வில்லனாக நடித்திருப்பார்.

அந்தப் படத்தின் வெற்றி மற்றும் மன்சூர் அலிகானின் அசத்தலான நடிப்பால் தொடர்ந்து பல படங்களில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு வர சினிமாவை ஒரு காலகட்டத்தில் தன் வசம் வைத்திருந்தார். அந்த காலத்தில் பெண்களை ரேப் செய்வது, தோட்டத்தில் ஓடி பெண்களை சீரழிப்பது போன்ற காட்சிகளில் எல்லாம் மன்சூர் நடித்ததனால் அவரை கண்டாலே பெண்ரசிகைகள் பயப்பட்ட காலமெல்லாம் உண்டு.

இதையும் படிங்க  : வேணானு போனாலும் விடமாட்டாக்கீங்களே? குஷி பட விழாவில் திடீரென தோன்றிய நாகு – கதறி அழுத சமந்தா

ஆனால் கொஞ்சம் பிரேக் எடுத்துக் கொண்டு சினிமாவிற்கே குட்பை சொன்னவர் மீண்டும் காமெடி நடிகராக, குணச்சித்திர நடிகராக ஒரு கம்பேக் கொடுத்தார். சமீபத்தில் கூட லியோ படத்தில் விஜயுடன் நடிக்கும் வாய்ப்பு வர அந்தப் படத்தில் முழுவதுமாக விஜயுடனேயே பயணம் செய்யும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாராம்.

இந்த நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய மன்சூர் அலிகானிடம் விஜய் டிவி புகழ் ராஜு ஒரு கேள்வியை கேட்டார். அதாவது அப்ப உள்ள நடிகர்களை இப்ப உள்ள தலைமுறைகள் மறந்து விடுகிறார்கள். ஆனால் உங்களை மட்டும் கொண்டாடி வருகிறார்கள்.

அவர்களுக்காக மற்றும் சின்ன குழந்தைகளுக்காக ஒரு படம் நடிக்க வேண்டும் என்றால் என்ன மாதிரியான கதாபாத்திரத்தில் நடிப்பீர்கள்?’ என்று கேட்டார். அதற்கு மன்சூர் அலிகான் ‘ நானே அப்படி நடிக்கனும் என்று இருக்கிறேன், சத்தியமா சொல்றேன். சம்பளமே வாங்காமல் நடிக்க வேண்டும், யாரும் எனக்கு பணம் கொடுக்க வேண்டாம்

இதையும் படிங்க : அட்லீக்கு தொடர்ந்து ஹெல்ப் செய்யும் தளபதி… கோலிவுட்டை தாண்டி பாலிவுட்டிலுமா? ஓவரு சார்!

முருகன் கதாபாத்திரத்தில் நடிக்கணும், என் ஊர் பழனிக்கு பக்கத்தில் இருக்கும் ஜவ்வாது பட்டி என்பதால் எனக்கு முருகரை மிகவும் பிடிக்கும். மேலும் கேபி.சுந்தராம்பாள் பாடல்களும் மிகவும் பிடிக்கும் ’ என்று கூறினார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top